<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rani. P. Shivan</title>
	<atom:link href="https://ranipshivan.com/category/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://ranipshivan.com</link>
	<description>ராணி. ப. சிவன் - தமிழ் எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்</description>
	<lastBuildDate>Fri, 23 Jan 2015 18:07:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
		<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
		<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=3.8.41</generator>
	<item>
		<title>பழுத்த ஓலை!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%93%e0%ae%b2%e0%af%88/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%93%e0%ae%b2%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 04 Jan 2015 18:08:06 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=627</guid>
		<description><![CDATA[<p>சிறுகதை &#8220;ஓய்&#8230; எம்மோவ்&#8230; அதென்னது இந்த ஏரியில மீன் புடிக்கிறவங்கள்ளாம் நம்மள மாதிரிப் பேசாம வேறமாதிரிப் பேசறாங்க?&#8221; தாய் நாகாத்தாளைப் பார்த்து அவளது மகள் சின்னப்பொண்ணு கேட்டாள். &#8220;அதா&#8230; தாயீ&#8230; நாம இந்தக் காஞ்சீபுரத்துல சீரும் சிறப்புமா நல்லா வாள்ந்தவங்க&#8230; ஒங்க அப்பாரோட அப்பாரு நீரு, நெலம், ஆளு, அம்புன்னு கொடிகட்டி வாள்ந்தவரு&#8230; ஆனா&#8230; பொம்பள&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%93%e0%ae%b2%e0%af%88/">பழுத்த ஓலை!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<h6><span style="color: #ff0000;">சிறுகதை</span></h6>
<div style="width: 1034px" class="wp-caption alignnone"><img title="033A4756CS by Andrzej Wrotek" alt="india fishermen photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2015/01/8487835230_76d8aeb77d_b_india-fishermen.jpg" width="1024" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/74075250@N00/8487835230" target="_blank">Andrzej Wrotek</a> <a title="Attribution-NoDerivs License" href="http://creativecommons.org/licenses/by-nd/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>&#8220;ஓய்&#8230; எம்மோவ்&#8230; அதென்னது இந்த ஏரியில மீன் புடிக்கிறவங்கள்ளாம் நம்மள மாதிரிப் பேசாம வேறமாதிரிப் பேசறாங்க?&#8221; தாய் நாகாத்தாளைப் பார்த்து அவளது மகள் சின்னப்பொண்ணு கேட்டாள்.</p>
<p>&#8220;அதா&#8230; தாயீ&#8230; நாம இந்தக் காஞ்சீபுரத்துல சீரும் சிறப்புமா நல்லா வாள்ந்தவங்க&#8230; ஒங்க அப்பாரோட அப்பாரு நீரு, நெலம், ஆளு, அம்புன்னு கொடிகட்டி வாள்ந்தவரு&#8230; ஆனா&#8230; பொம்பள சகவாசத்துல சொத்தெல்லாம் அளிஞ்சி&#8230; குடும்பமே நாசமாப் போச்சு. பாவம் ஒங்கப்பாரு என்னைய இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு இந்தக் காஞ்சீபுரம் நத்தம்பட்டு ஏரிக்கு வந்து முன்னப் பின்னத் தெரியாத இந்த மீன் புடிக்கிற வித்தயைக் கத்துக்கிட்டு கஷ்டப்பட்டாரு. இடையில வந்து இந்த சனங்களோட சேர்ந்துக்கிட்டதால முளுசா அவங்க பேசுறமாதிரி நமக்கு வரல இல்ல&#8230; மகராசன் என்ன மவராணி மாதிரிதான் வெச்சுருந்தாரு. ஒனக்கும் எனக்கும் கொடுத்து வெக்கல. ஒனக்கு நாலு வயசாகும்போதே ஏதோ சீக்கு வந்து மேல போய் சேந்துட்டாரு. சரி&#8230; சரி&#8230; கெளம்பு ஏரிக்குப் போவலாம்.&#8221;</p>
<p>&#8220;என்ன ஏதுக்குக் கூப்பிடற?&#8221;</p>
<p>&#8220;அடியே&#8230; கண்டாங்கிச் சிறுக்கி! பேருதான் சின்னப்பொண்ணு&#8230; ஆனா நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோ&#8230; மத மதன்னு நீ நிக்கறதப் பாத்தா எனக்குப் பயமாருக்கில்ல? சீக்கிரமா ஒன்ன ஒருத்தன்கிட்டப் புடிச்சுக் குடுத்துட்டேன்னா நான் நிம்மதியாய் ஊருப் போய்ச் சேருவேன். அதுக்கு முன்னால ஒனக்கு இந்த மீன் புடிக்கிற தொளில கத்துக் குடுத்திட்றேன். கெளம்பு&#8230; கெளம்பு.&#8221;</p>
<p>காற்று நிறைந்த இரண்டு டயர் டியூபுகளையும் கூடவே கில்நெட் எனப்படும் மீன் வலைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.</p>
<p>சின்னப்பொண்ணுக்குக் கடல் மாதிரி தெரியற ஏரியைப் பார்க்கவே எப்போதும் பயமாக இருக்கும். நெறைய ஆண்களும் பெண்களும் படகுகளிலும்&#8230; சிலர் காற்றடித்த டயர் டியூபுகளின் உள்ளே உடம்பை நுழைத்துக்கொண்டும்&#8230; கால்களில் தள்ளியவாறே ஏரியின் உள்ளே செல்வதைப் பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.</p>
<p>&#8220;அடி ராசாத்தி&#8230; அங்கென்னத்தப் பாக்கற? இந்தா&#8230; இப்பிடிக்கா வா. பொடவைய மேல தூக்கிக் கட்டிக்கோ.&#8221;</p>
<p>&#8220;அய்யோ&#8230; எம்மோவ்&#8230; கூச்சமா இருக்கு. அல்லாரும் பாக்கறாங்கல்ல?&#8221;</p>
<p>&#8220;அவ(ன்) பாக்கறான் இவ(ன்) பாக்கறான்னு இருந்தியானா இன்னக்கி நாம மீன் புடிச்சி வெளங்கினாமாதிரிதான். இந்தா&#8230; ஒடம்புல இந்த டியூப மாட்டிக்கோ. தோ பாரு&#8230; என்னமாதிரி அப்டியே கால்ல தண்ணிய தள்ளிக்குனு உள்ள ஊடாற போகணும். ஏரியக் காக்கற அந்த மகமாயி நம்மளக் காப்பாத்துவா.&#8221;</p>
<p>&#8220;என்னா&#8230; நாகா‍‌யீ&#8230; புதுசா பொண்ணுக்குத் தொளில கத்துக் குடுக்கறியா?&#8221; கேட்டது அண்ணாச்சி அருமை நாயகம்.</p>
<p>&#8220;ஆமா அண்ணாச்சி.&#8221;</p>
<p>&#8220;சரி&#8230; சரி&#8230; ஒரு வெஷயம். நாளைக்கி மீன் டிபார்ட்மெண்ட் ஆபீச சீக்கிரமே மூடிப்புடுவாங்களாம்ல. மீன் புடிக்கறதுக்கு டோக்கன் வாங்கனுமில்ல. அதனால நேரத்துலயே போயி டோக்கன் வாங்கிடுங்க&#8230; இந்தச் சேதிய அல்லார்கிட்டையும் சொல்லிப்புடு புள்ள.&#8221;</p>
<p>&#8220;சரிங்க அண்ணாச்சி&#8230;&#8221;</p>
<p>நாகாத்தாளும் சின்னப்பொண்ணும் அப்படியே டயர் டியூபில் நீந்திக்கொண்டு ஏறக்குறைய ஏரியின் நடுப்பகுதிக்கே வந்து விட்டனர்.</p>
<p>&#8220;இத&#8230; இதப் பாரு&#8230; இத மாதிரித் தான் இந்த கில்நெட்டைப் போடணும்&#8230; கொஞ்ச நேரத்துல இதுல நிறைய மீனுங்க உளும்.&#8221;</p>
<p>ஒரு நாலு மணிநேரம் மீன் பிடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.</p>
<p>இப்போதெல்லாம் நாகாத்தாளை விட சின்னப்பொண்ணுதான் மீன் பிடிப்பதில் கெட்டிக்காரி!</p>
<p>சின்னப் பொண்ணு மீன் பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து நத்தம்பட்டி ஏரியே கலகலத்தது.</p>
<p>தினமும் கண்டாங்கிச் சேலையுடன் அவள் நடந்து வருவதே நாட்டியம் போல இருந்தது.</p>
<p>அவள் சேலையைத் தூக்கி மேலே இடுப்பில் கட்டும்போதெல்லாம் கட்டிளங் காளைகள் தலை கிறுகிறுத்துப் போனார்கள்.</p>
<p>இதையெல்லாம் சட்டை செய்யாமலே இருந்தாள் சின்னப்பொண்ணு.</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>கொஞ்ச நாட்களாகவே அவளது தாய் நாகாத்தாளுக்கு உடம்பு முடியாமலே இருந்தது.</p>
<p>அதனால் சின்னப்பொண்ணு கொஞ்ச நாட்கள் மீன் பிடிக்கப் போகாமல் இருந்தாள்.</p>
<p>&#8220;எத்தனை நாளுக்குத் தான் தொளிலுக்குப் போகாம இருப்பே? எனுக்கு ஒண்ணும் ஆயிப்புடாது. அதான் வைத்தியன் வந்து மருந்து குடுத்திருக்கான்ல? அல்லாம் சரியாப் போயிடும். நீ கெளம்பு.&#8221; நாகாத்தாள் சத்தம் போட்டாள்.</p>
<p>கொஞ்ச நாட்கள் என்றதுபோய் மாதக் கணக்கில் படுத்தப் படுக்கையானாள். அவளுக்குப் பணிவிடை செய்துவிட்டு விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மீன் பிடிக்கச் சென்றுவிடுவாள் சின்னபொண்ணு. ஏதோ&#8230; குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.</p>
<p>அன்று சின்னப்பொண்ணுக்கு உடம்பை என்னமோ செய்தது.</p>
<p>சமாளித்தவாறு டயர் டியூபை கால்களால் தள்ளிக்கொண்டே சென்றவள் ஏரித் தண்ணீரில் கில்நெட்டையும் போட்டுவிட்டாள். மீன்கள் விழத் தொடங்கின. பிறகு அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.</p>
<p>விழித்தபோது அவளது குடிசையில் இருந்தாள்.</p>
<p>அவளையே பார்த்தவாறு அழகிய கட்டு மஸ்தான ஒரு வாலிபன் நின்றிருந்தான்!</p>
<p>அவசர அவசரமாக எழப்பார்த்தவளை, &#8220;எளாத&#8230; எளாத&#8230; ஒனக்கும் ஒங்க தாயி மாதிரியே வெஷ ஜுரம். இப்பத்தான் வைத்தியர் வந்து போனாரு. பக்கத்துல கஞ்சி இருக்கு. சாப்டுட்டு&#8230; இந்தா இந்த மாத்திரையை போட்டுக்குனு நல்லாத் தூங்கு. ஒங்க ஆத்தா சாப்டுடுச்சி. அதுக்கும் மாத்திரைய நானே குடுத்துப்புட்டேன். சூரியன் சாஞ்சதும் வாரேன்!&#8221;</p>
<p>அவன் கிளம்பிவிட்டான்.</p>
<p>சொன்னது போலவே பொழுது சாய்ந்ததும் அவன் வந்தான்&#8230; பேசினான்&#8230; சென்றான்&#8230;</p>
<p>திரும்பவும் வந்தான்&#8230; அவளது தாய் மூலமாக அவனது பெயர் அர்ச்சுனன் என்பதும் மீன் பிடித் தொழிலில் கெட்டிக்காரன் என்பதும் ஒரு படகுக்குச் சொந்தக்காரன் என்பதும் தெரிய வந்தது. மயக்கமாக ஏரியில் விழுந்தவளை அவன்தான் காப்பாற்றி வீடு சேர்த்திருக்கிறான்.</p>
<p>அவள் பிடித்த ரோகு, கட்லா, திலப்பியா, வெரால் மீன் மூட்டையையும், கில்நெட் டயர் டியூபையும் தூக்கிக்கொண்டு வந்ததோடு, மீன்களையும் அவனே விற்றுப் பணத்தையும் கொடுத்திருக்கிறான் என்பது தெரிந்து மனம் நெகிழ்ந்து போனாள்.</p>
<p>சின்னப்பொண்ணும் அவளது தாய் நாகாத்தாளும் அவன் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர்.</p>
<p>சின்னப்பொண்ணுவின் நோய் கொஞ்சங்கொஞ்சமாக குணமாகிய அதே நேரத்தில் நாகாத்தாளின் நோய் முற்றத் தொடங்கியது.</p>
<p>எதிர்பாராத ஒரு நாளில் நாகாத்தாள் இறந்து போனாள்.</p>
<p>தாயை இழந்த அதிர்ச்சி நீங்க சின்னப்பொண்ணுவிற்கு நிறைய மாதங்கள் ஆகின.</p>
<p>அந்தச் சமயங்களில் எல்லாம் அர்ச்சுனன் தான் அவளுக்கு ஆதரவாக இருந்தான்.</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</p>
<p>நாகாத்தாள் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.</p>
<p>ஏரியைப் பார்த்தவாறு ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருந்தாள் சின்னப்பொண்ணு.</p>
<p>&#8220;எந்தக் கோட்டைய புடிக்குறாப்புல?&#8221; கேட்டது அர்ச்சுனன்.</p>
<p>&#8220;அர்ச்சுனன் கோட்டையைத்தான்!&#8221;</p>
<p>&#8220;ஆரு? இந்தச் சின்னப்பொண்ணா புடிக்கப்போறது?&#8221;</p>
<p>&#8220;இல்ல&#8230; இல்ல&#8230; நான்&#8230; இப்போ பெரீய்ய்ய்ய்யப் பொண்ணு. அதென்னது பேரு அர்ச்சுனன்னு? இந்தக் காலத்துல ஆரு ராசா பேரெல்லாம் வெச்சுக்கிறாங்க?&#8221;</p>
<p>&#8220;நானா வெச்சுக்கிட்டேன்? என்னப் பெத்தவங்க வெச்சப் பேரு.&#8221;</p>
<p>&#8220;அர்ச்சுனன்னா&#8230; வில் அம்பு விடுவியரோ?&#8221;</p>
<p>&#8220;முன்னாலேயே உட்டுட்டேன்!&#8221;</p>
<p>&#8220;எப்போ?&#8221;</p>
<p>&#8220;இப்போதான்!&#8221;</p>
<p>&#8216;இப்போவா? யார் மேல?&#8221;</p>
<p>&#8220;ஒன் மேலதான்&#8230; அதான் சாச்சிட்டேன்ல?&#8221;</p>
<p>&#8220;ஐயே&#8230; ரொம்ப வம்படிக்கிறவங்கதான் நீங்களோ?&#8221;</p>
<p>&#8220;வம்படிக்கச் சொல்றது ஒங்கக் கண் அம்புதாங்கோ!&#8221;</p>
<p>&#8220;நல்லா இருக்கே நீங்க சொல்றோது&#8230; நானே சிவனேன்னு இருக்கேன்!&#8221;</p>
<p>&#8220;ஐயையோ&#8230; யாரது அந்தச் சிவன்?&#8221;</p>
<p>&#8220;ஐயே&#8230; ச்சீ&#8230; நான் சொன்னது சாமிய!&#8221;</p>
<p>&#8220;நீ என்னமோ சிவனேன்னு இருந்தாலும் ஏன் ஜீவன் ஒன்னிட்டுல்ல இருக்கு!&#8221;</p>
<p>அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் படபடப்புடன் குடிசையை நோக்கி ஓடலானாள். குடிசைக்குள் வந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.</p>
<p>அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.</p>
<p>&#8220;ஏய்&#8230; அளாத!&#8221;</p>
<p>&#8220;இல்ல&#8230; என்னோட ஆத்தாளும் போய்ச் சேர்ந்துட்டா. குடிசைல தனியா இருக்க பயமா இருக்கு.&#8221;</p>
<p>&#8220;ஒண்ணும் பயப்படாத. நா இருக்கேன். தாள்ப்பாள கெட்டிமா போட்டுட்டுத் தூங்கு. எங்க அப்பாரு அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுடறேன்.&#8221;</p>
<p>கொஞ்ச நாட்களாக அர்ச்சுனனைக் காணவில்லை. அதனால் வயதான கிழவன் மாணிக்கத்தை காவலுக்கு வைத்துக் கொண்டாள்.</p>
<p>ஒரு நாள் &#8211; திடீரென்று அவளது பின்புறம் யாரோ நிற்பது போன்ற பிரமை. திரும்பிப் பார்த்தாள்&#8230; அர்ச்சுனன்!</p>
<p>அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. வெட்ட வெளியைப் பார்த்தவாறு பாடினாள்.</p>
<p>&#8220;தண்ணி மேல போனாலும்<br />
குடிக்கத் தண்ணி கிடைக்கல<br />
அதுபோல<br />
பக்கத்துலையே பாசமா இருந்தாலும்<br />
பளகறதுக்கு ஆசையே இல்ல<br />
நெஞ்சமெல்லாம் நீ இருக்கேன்னு<br />
நெக்குருகி நான் நின்னாலும்<br />
நெடுந்தூரம் போன மச்சானுக்கு<br />
படுந்துயரம் தானா தெரியலையே<br />
ஊரு சனம் என்ன சொல்லுமோ<br />
பாருன்னு என்னைப் பரிதவிக்க<br />
வெச்ச மச்சான்!<br />
வெளியத்தான் கழுகுகள்னா<br />
உள்ளேயும் கிழங்கழுகு<br />
பாழுங் கெணத்துல நான்<br />
விளுந்தப் பின்னாடி நீ<br />
ஓடி வந்தா என்னா&#8230;<br />
நடந்துவந்தா என்னா&#8230;<br />
இருக்கப் போவது என்னோட<br />
உசிரில்லா ஒடம்பு தானே&#8230;<br />
என்னத்த செய்யப் போற?&#8221;</p>
<p>அவனுக்கு சிரிப்பு வந்தது. என்றாலும் அவளது பாட்டின் கனம் தெரிந்து அவளைச் சாடுகிறான்.</p>
<p>&#8220;அடிக் கிறுக்கி<br />
அழிச்சாட்டிக் கிறுக்கி<br />
ஆலமரத்தைச் சுத்திப்புட்டு<br />
அடிவயத்தைத் தொடறவளே<br />
அவசரம் ஏதுக்கடி<br />
ஆயாளோடப் பேத்தியே<br />
ஒன்ன நெனச்சியே<br />
ஓடி ஓடி ஒளைக்கிறேன்<br />
பின்ன எதுக்குடி<br />
பிச்சிப் பிச்சித் திங்கறே<br />
மச்சான் நான் வருவேன்<br />
மருக்கொளுந்து வாசனையோட<br />
மனம் மகிழ சனம்பார்க்க<br />
ஊரு கூட்டி ஓலகங் கூட்டி<br />
ஒன்ன என்னவளாக்கி<br />
தென்னைப் புன்னை மரத்தூடே ஓடி<br />
என்னை ஒனக்கே கொடுப்பேன்<br />
அதுவரை மாமனுக்காக<br />
காத்திரு மாமரத்துக் கிளியே<br />
மச்சான் இதோ வந்துட்டேன்<br />
அச்சாரம் போடவே<br />
ஆடிக் களிச்சிரு<br />
அரச மரத்தடியில்<br />
முரசு கொட்டி ஒன்ன<br />
முல்லை மலர் மாலையோட<br />
மூச்சுத் திணற திணற<br />
கட்டி அணைப்பேன்<br />
கட்டி முத்தம் தருவேன்<br />
உயிர் பொழச்சி இரடி<br />
உன்மத்தம் புடிச்சவளே<br />
ஓடி வாரேன் இதோ!&#8221;</p>
<p>இப்படிப் பாடியவன் &#8220;இதோ பார்&#8230; திரும்பவும் நான் படகு வாங்கற விஷயமா நாகப்பட்டினம் போற சோலி இருக்கு. சட்டுன்னு வந்துடுவேன். காவலுக்குத் தான் கிழவன் இருக்கான்லே&#8230;&#8221; சொல்லியவன் அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான்.</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</p>
<p>&#8220;எலேய்&#8230; அர்ச்சுனா! ஊருக்கு எப்படா வந்தே?&#8221; கேட்டது இன்னொரு மீன் பிடிக்காரன்.</p>
<p>&#8220;இப்பத்தேன் வந்தேன்&#8230; என்னோட சின்னப்பொண்ணு எப்டி இருக்கா?&#8221; இப்படி அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே&#8230;</p>
<p>&#8220;அடேய் அர்ச்சுனா&#8230; அங்கன என்னடா சோலி? ஒன்னோட சின்னப்பொண்ணு காவக்கார கெழவன போட்டுத் தள்ளிட்டா!&#8221;</p>
<p>&#8220;அய்யோ&#8230; அம்மாடீ!&#8221; என்றவன் காற்றைவிட வேகமாகச் சென்று அவள் குடிசையை அடைந்தான்.</p>
<p>ஊர் மக்கள் கூடியிருந்தனர்.</p>
<p>காவல்கார கிழவன் மாணிக்கம் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான்.</p>
<p>உடம்பெல்லாம் ரத்தம் தோய சின்னப்பொண்ணு காளி மாதிரி ஆவேசத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.</p>
<p>அர்ச்சுனனைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதாள்.</p>
<p>அவள் சொல்லாமலேயே காமக்கிழவனை அவள் வெட்டிய காரணம் புரிந்தது.</p>
<p>பதட்டத்துடன் அர்ச்சுனன் அவளது கையிலுள்ள வெட்டுக் கத்தியை வாங்கிக் கொண்டான்.</p>
<p>&#8220;பயப்படாத&#8230; இந்தக் கொலையை நீ செய்யலப் புள்ள. நான் செஞ்சிட்டேன்னு போலீஸ் கிட்டச் சொல்றேன்.&#8221;</p>
<p>&#8220;இல்ல மச்சான்&#8230; நான் செஞ்சேன்னு தான் சொல்வேன்.&#8221;</p>
<p>&#8220;புத்திக் கெட்டுப் போச்சா ஒனக்கு?&#8221;</p>
<p>&#8220;இல்ல மச்சான்&#8230; நீ சொல்றாமாதிரியான வெஷயத்தை சினிமா டிராமாவிலே எல்லாம் பாத்திருக்கேன். ஆனா நா ஏன் நானே செஞ்சதா சொல்லணும்னு நெனக்கறேன்னு தெரியுமா? இந்தா மாதிரியான ஆம்பளைங்கள தயவு தாட்சணியம் இல்லாம பொம்பளைங்க என்ன மாதிரி தகிரியமா வெட்டிச் சாக்கோணம் மச்சான். அப்போதான் காமந்தக்காரனுங்க பயப்படுவானுங்க.&#8221;</p>
<p>&#8220;அடியே&#8230; மதி கெட்டவளே! ஒன்னப் பாத்துதான் பொம்பளைங்க இந்தா மாதிரி செய்வாங்கன்னு நெனச்சுக்காத&#8230; மானத்துக்குப் பங்கம் வர்ற போது சாதுவா இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் பொங்கி எளுந்துடுவா.&#8221; என்றவன் யாரும் எதிர்பாராத நிலையில் வெட்டுக்கத்தியை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் உடலில் செலுத்தினான்.</p>
<p>&#8220;இதோ&#8230; இப்போ நானும்தான் அவனை வெட்டிப்புட்டேன்!&#8221;</p>
<p>சின்னப்பொண்ணு கதறியவாறு&#8230; &#8220;ஐயோ, நீ ஜெயிலுக்குப் போனபின்னால பொம்பளச் சிறுக்கி எனக்கு என்னய்யா சோலி இருக்கு இந்த ஒலகத்துல?&#8221;</p>
<p>இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர்த் தலையாரி கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ சமிக்ஞையுடன் பேசினார். எல்லோரும் அவர் சொல்வதற்கு சரி&#8230; சரி&#8230; எனத் தலையாட்டினர்.</p>
<p>&#8220;மாணிக்கம் கெட்டவன்தான்னாலும் அவன் உயிர் துடிக்க நாம பாத்துக்கிட்டிருக்க முடியாது.&#8221; என்று சொல்லியவாறு தலையாரி வெட்டுக் கத்தியை எடுத்து இன்னும் கூட உயிர் போகாமலிருந்த மாணிக்கத்தின் உடலை வெட்ட முற்பட, அப்போது குறுக்கிட்ட ஒரு இளைஞன் &#8220;ஐயா, எப்ப பதவி கிடைக்கும்&#8230; கிராமத்தையே கொள்ளை அடிச்சுடலாம்னு நினைக்கிறவங்க மத்தியில நீங்க பொடம் போட்ட தங்கமா எங்களுக்குக் கிடைச்சிருக்கீங்க. இந்த கிராமத்துக்கு நீங்க வேணுமய்யா&#8230; இதோ நாங்க இப்போ ஒவ்வொருத்தரும் கொண்டாந்திருக்கிற வெட்டருவாளைக் கொண்டு மாணிக்கத்தின் உடலை கூறு போட்டுடறோம்&#8230;&#8221; என வேறு சில இளைஞர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர்.</p>
<p>துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தின் உயிர் மொத்தமாக பிரிந்தது.</p>
<p>இப்போது தலையாரி பேசினார். &#8220;அர்ச்சுனா&#8230; நீயும் சரி, சின்னப்பொண்ணும் சரி&#8230; யாரும் இந்தக் கொலைய செய்யல&#8230; ஊரே செஞ்சிருக்கு. வள்ளுவச் சாமியே நம்ப பாட்டன் பூட்டன் காலத்துலேயே சொல்லிப்புட்டாரு&#8230; நல்ல காரியத்துக்கு பொய் சொன்னா தப்பில்லையாம். இப்ப இல்லனாலும் சடுதியில நீங்க ரெண்டுபேரும் கல்லாணம் கட்டி வாளறதுக்கு நம்ம ஊரு சனங்க மட்டுமில்ல&#8230; நம்ம ஊரு குலதெய்வம் மகமாயியும் உங்கள காப்பாத்துவா&#8230;&#8221;</p>
<p>அர்ச்சுனன் ஆதுரத்துடன் சின்னப்பொண்ணுவின் கையைப் பிடித்து நிற்க&#8230; போலீஸ் வேன் வந்து நின்றது!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%93%e0%ae%b2%e0%af%88/">பழுத்த ஓலை!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%93%e0%ae%b2%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சர்வாங்கம்</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Tue, 18 Nov 2014 21:28:56 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=545</guid>
		<description><![CDATA[<p>சிறுகதை ட்ரிங்&#8230; ட்ரிங்&#8230; ஃபோன் அலறியது. &#8220;ஹலோ!&#8221; &#8220;உம்&#8230; வந்து&#8230; நான் ராமபத்ரன். லண்டன்ல இருந்து பேசறேன்&#8230;.&#8221; &#8220;அடடே&#8230; சொல்லுங்கோ மிஸ்டர் ராமபத்ரன்&#8230; நான் தான் பொண்ணோட ஃபாதர் கல்யாணம் பேசறேன்&#8230; சொல்லுங்கோ&#8230;&#8221; &#8220;ஓங்கப் பேருக்கு ஏத்தா மாதிரி நம்மப் பிள்ளைகளோட கல்யாணத்தைப் பத்தி தான் பேசலாம்னு&#8230; நாங்க அடுத்த வாரம் பெண் பார்த்துட்டு அப்படியே&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/">சர்வாங்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<h6><span style="color: #ff0000;">சிறுகதை</span></h6>
<div style="width: 1034px" class="wp-caption alignnone"><img title="Heathrow Terminal 5 tube station sign by James Cridland" alt="heathrow airport photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/11/2374321483_45dec3c7e8_b_heathrow-airport.jpg" width="1024" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/18378655@N00/2374321483" target="_blank">James Cridland</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>ட்ரிங்&#8230; ட்ரிங்&#8230; ஃபோன் அலறியது.</p>
<p>&#8220;ஹலோ!&#8221;</p>
<p>&#8220;உம்&#8230; வந்து&#8230; நான் ராமபத்ரன். லண்டன்ல இருந்து பேசறேன்&#8230;.&#8221;</p>
<p>&#8220;அடடே&#8230; சொல்லுங்கோ மிஸ்டர் ராமபத்ரன்&#8230; நான் தான் பொண்ணோட ஃபாதர் கல்யாணம் பேசறேன்&#8230; சொல்லுங்கோ&#8230;&#8221;</p>
<p>&#8220;ஓங்கப் பேருக்கு ஏத்தா மாதிரி நம்மப் பிள்ளைகளோட கல்யாணத்தைப் பத்தி தான் பேசலாம்னு&#8230; நாங்க அடுத்த வாரம் பெண் பார்த்துட்டு அப்படியே கல்யாணத் தேதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டு திரும்பிடலாம்னு இருக்கோம்.&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; அப்படியா? பேஷ்&#8230; பேஷ்&#8230; அப்படியே செஞ்சுடலாம். முதல்ல வாங்க. நீங்க சொல்றா மாதிரியே எல்லாத்தையும் முடிச்சுடலாம்&#8230; சரிங்க&#8230; சரிங்க&#8230; பை பை&#8230;&#8221;</p>
<p>ஃபோனை வைத்தவாறு&#8230; &#8220;அடி&#8230; கோமு&#8230; மாப்ள வீட்லேர்ந்து ஃபோனு&#8230; அவாள்லாம் அடுத்த வாரம் இந்தியா வர்றாளாம்&#8230; கல்யாணத்தை சட்டுப் புட்டுன்னு முடிக்கணும்ங்கறா&#8230;&#8221; என்று மனைவியிடம் கூறினார்.</p>
<p>&#8220;ரொம்ப சந்தோஷமா இருக்குங்க&#8230; அவா என்ன கேட்டாலும் செஞ்சுடலாம்&#8230; ஒங்கப் புள்ளாண்டான் வந்ததும் அவன் காதுலயும் போடுங்க. நாம வேற ஆச்சாரக் குடும்பம்! அவா எப்படி இருப்பாளோ தெரியல.&#8221;</p>
<p>&#8220;அவாளும் ஆச்சாரக் குடும்பம் தான்டீ&#8230; ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட பேசும் போது சொல்லிண்டு இருந்தார்&#8230; அவாள்லாம் லண்டன்ல இருந்தாலும் எந்த ஆச்சார அனுஷ்டானத்தையும் விடறதில்லையாம். எல்லாம் நேர்த்தியா செஞ்சிண்டிருக்காளாம். நாம தான் இங்க மாடர்ன்&#8230; மாடர்ன்னு சொல்லிண்டு நாட்டையும் வீட்டையும் கெடுத்துண்டிருக்கோம்!&#8221;</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>&#8220;மாப்ள ஆத்துலேர்ந்து எல்லாரும் வந்துண்டிருக்காளாம்&#8230; ஏம்மா பூர்வி! ரெடியா?&#8221; கல்யாணம் பதற்றத்துடன் கேட்டார்.</p>
<p>&#8220;இதோ&#8230; ரெடிப்பா&#8230; இந்த வாசு அண்ணாவைக் கொஞ்சம் கவனியுங்களேன். என்னைப் பாடாய்ப் படுத்தறான். பட்டுப் புடவையைக் கட்டிண்டு, தலை நிறையப் பூவை வெச்சுண்டு, கழுத்து நிறைய நகையைப் பூட்டிண்டு வந்து நில்லுங்கிறான்பா&#8230; என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது! கொஞ்சம் சொல்லுங்கோ அவனாண்ட.&#8221;</p>
<p>&#8220;டேய் வாசு&#8230; அவளைப் படுத்தாதேடா. எம்.ஏ. படிச்ச அவளுக்கு அதெல்லாம் தேவையில்லைன்னு தோணறதோ என்னமோ&#8230; விடுடா. நோக்கு பொண்ணப் பார்க்கும்போது அப்படியே செஞ்சுடலாம். அவளை இப்போதைக்கு விடு.&#8221;</p>
<p>&#8220;உலகத்துல நடக்காததையா நான் சொல்லிட்டேன்! எப்படியோ போங்க&#8230;&#8221; சலித்துக் கொண்டான் வாசு.</p>
<p>வீடே அமர்க்களமாக இருந்தது. இப்போதே வீடு கல்யாணக் களை கட்டியது.</p>
<p>மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பூர்வியை மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.</p>
<p>&#8220;ஓங்கப் பொண்ணு அப்சரஸ் மாதிரின்னா இருக்கா. அதான் கிருஷ்ணா சரண்டர் ஆயிட்டான்&#8230;&#8221; ராமபத்ரன் கூறினார்.</p>
<p>&#8220;ஏன்&#8230; ஓங்கப் புள்ளாண்டான் மட்டும் என்னக் குறைச்சலா&#8230; அப்படியே &#8216;கிருஷ்ணா &#8230; முகுந்தா&#8230; முராரே&#8217;ன்கிறா மாதிரியில்ல திவ்யமா இருக்கார்! படிச்சிருந்தும் நெத்தில நாமத்த வரிச்சுண்டு வந்திருக்காரே&#8230; அப்படியே சாட்சாத் ராமபிரானைப் பார்த்தா மாதிரி இருக்கு. எம்பொண்ணும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கா&#8221; &#8211; கல்யாணம் பதிலுக்குக் கூறினார்.</p>
<p>இதற்கிடையில்&#8230;</p>
<p>கல்யாணத்தின் மனைவி கோமு அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்&#8230;</p>
<p>&#8220;என்னம்மா பூர்வி&#8230; என்ன விஷயம்?&#8221;</p>
<p>&#8220;அப்பா&#8230; இல்லப்பா&#8230; அவரு லண்டன்ல இருக்கார்&#8230; நமக்கு அவா குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியாது&#8230; அதனால&#8230; அதனால&#8230;&#8221;</p>
<p>&#8220;அதனால?&#8221;</p>
<p>&#8220;ஹெல்த் வைஸ் அவர் பர்ஃபெக்டுங்கிறா மாதிரி ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வாங்கித் தந்தார்னா நன்னா இருக்கும்.&#8221;</p>
<p>&#8220;என்ன சொல்லிண்டிருக்கே நீ&#8230; அவா அதுக்கெல்லாம் ஒத்துப்பாளா?&#8221;</p>
<p>&#8220;ஒத்துக்க வைக்கணும்பா&#8230; பின்னால ஏதாச்சும் பிரச்சினை வந்தா பாதிப்பு எனக்குத் தானே? அதுவும் இல்லாம இதுக்கு ஒத்துக்கிட்டா தான் கல்யாணத்துக்கு சரிம்பேன்&#8230; நானும் எனக்கான ஹெல்த் சர்டிஃபிக்கேட்டை அவா சொல்ற டாக்டர் கிட்டேயே வாங்கித் தந்துடறேன்!&#8221;</p>
<p>கண்டிப்பு அவள் குரலில் தெரியவே ராமபத்ரனிடம் கூறினார்.</p>
<p>ராமபத்ரன் மகனிடம் கூறினார்.</p>
<p>&#8220;ஓ&#8230; அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சு&#8221; என்றவன், &#8220;நான் கொஞ்சம் தனியாப் பொண்ணோட பேசணுமே&#8221; என்றான்.</p>
<p>பேச அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>&#8220;பூர்வி&#8230; அப்படியே என்னைக் கிறங்கடிச்சுட்ட&#8230;&#8221;</p>
<p>&#8220;நீங்க மட்டும் என்னவாம்?&#8221;</p>
<p>&#8220;உண்மையாவா?&#8221;</p>
<p>&#8220;உண்மையாதான்!&#8221;</p>
<p>&#8220;அது சரி&#8230; அதென்ன, என்னமோ டாக்டர் சர்டிஃபிக்கேட் அது இதுன்னு கேக்கறதா அப்பா சொன்னாரே&#8230;&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8230; நான் தான் சஜஸ்ட் செய்தேன்!&#8221;</p>
<p>&#8220;ஏன்&#8230; என்மேல நம்பிக்கை இல்லையா?&#8221;</p>
<p>&#8220;நம்பிக்கை எல்லாம் இருக்கு. ஆனாலும் ஓங்கப் ஃபேமிலி பத்தி முக்கியமா உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே&#8230; அதனாலத்தான்&#8230; அதுவுமில்லாம&#8230; நாம ரெண்டு பேருமே படிச்சிருக்கோம். இப்போவெல்லாம்&#8230; மத்தவாளே டிமாண்ட் பண்றா&#8230; நாம இன்னும் சிரத்தையா இருக்கணும்ல&#8230;?&#8221;</p>
<p>&#8220;ஆமாமா&#8230; நீ சொல்றதும் சரிதான்&#8230; அதெல்லாம் செஞ்சிடலாம்&#8230; சரியா? நான் ஒண்ணு கேக்கறேன்&#8230; மறுக்கக் கூடாது.&#8221;</p>
<p>&#8220;மறுக்கக் கூடாததைக் கேளுங்களேன்!&#8221;</p>
<p>&#8220;பாருடா&#8230; கெட்டிக்காரத்தனத்தை! சரி&#8230; சரி&#8230; நம்மக் கல்யாணத்துக்கு இடைவெளி ரெண்டு மாசம்கிறது கொஞ்சம் அதிகமாகவே தெரியுது. அதுவரைக்கும் எனக்குப் பொறுமையில்ல. அடுத்த மாசம் நீ லண்டன் வர்றதுக்கு டிக்கட் அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாள் என்னோட இருந்திட்டு நீ இந்தியா திரும்பிடலாம்.&#8221;</p>
<p>&#8220;ஐயய்யோ&#8230; எனக்கு லீவு கிடைக்காது&#8230; ஆபீஸ்ல நிறைய வேலையிருக்கு&#8230; அதுவுமில்லாம&#8230;&#8221;</p>
<p>&#8220;இதோ பார், பொறுப்புகளை தவிர்த்துட்டு வான்னு சொல்லல&#8230; ஒன்னோட வேலை செய்யற பிரண்ட்ஸ்களிடம் வேலைகளை ஒப்படைச்சுட்டு வா. இந்த இளமைக் காலத்துல இதையெல்லாம் அனுபவிக்கலைன்னா எப்போதான் அனுபவிக்கிறது? கல்யாணமானதும் எதுக்குமே நேரமிருக்காது. ஏன் ஒனக்கு என்னைப் பிடிக்கலையா?&#8221;</p>
<p>&#8220;ச்சே&#8230; ச்சே&#8230; அப்படியெல்லாம் இல்லை.&#8221;</p>
<p>&#8220;பிடிச்சிருக்கில்லே?&#8221;</p>
<p>&#8220;உம்.&#8221;</p>
<p>&#8220;பின்ன என்ன?&#8221;</p>
<p>&#8220;ஒண்ணும் இல்ல. சரி. ட்ரை பண்றேன்.&#8221;</p>
<p>பூர்வி ஒரு மாதத்தில் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸில் பறந்தாள்.</p>
<p>ஹீத்ரோ விமான நிலையத்தில் கிருஷ்ணா நின்றிருந்ததைப் பார்த்ததும் பூர்விக்கு என்னவென்று சொல்லமுடியாத ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.</p>
<p>கிருஷ்ணா அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.</p>
<p>அவசர அவசரமாக அவனிடமிருந்து விலகிக் கொண்டவள் &#8220;எப்படி இருக்கீங்க?&#8221; என்றாள்.</p>
<p>&#8220;எனக்கென்ன&#8230; ராஜாவாட்டம் இருக்கேன்&#8230; நீ?&#8221;</p>
<p>&#8220;நானும் ராணி மாதிரி தான் இருக்கேன்.&#8221;</p>
<p>இருவரும் ஓவென்று சிரித்தனர்.</p>
<p>டாக்சியில் ஏறினர்.</p>
<p>டாக்சி லண்டனிலிருந்து பிரிஸ்டலை நோக்கிச் சென்றது. அங்கே &#8216;ப்ரிமியர் இன்&#8217; ஹோட்டலின் முன் நின்றது.</p>
<p>அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.</p>
<p>&#8220;ஏன் ஹோட்டலுக்கு?&#8221;</p>
<p>&#8220;பயப்படாத. நான் ஒண்ணும் புலி இல்லை. கடிச்சித் தின்னுட மாட்டேன்.&#8221;</p>
<p>&#8220;எத்தனை நாள் தங்கப் போறோம்?&#8221;</p>
<p>&#8220;ஒரு ரெண்டு நாள் தான்.&#8221;</p>
<p>&#8220;ஒங்க பேரண்ட்ஸுக்குத் தெரியுமா?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; தெரியுமே.&#8221;</p>
<p>அதைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.</p>
<p>இதற்கு இடையில் அவன் செல் ஃபோன் அலறியது.</p>
<p>&#8220;ஓ மை காட். ஐயம் சாரி&#8230; ஐ ஹாவ் கம்ப்ளீட்லீ ஃபர்காட்டன். சாரி&#8230; சாரி&#8230; ஐ எம் ரஷிங் நவ். வில் பி தேர் இன் தர்ட்டி மினிட்ஸ்.&#8221;</p>
<p>&#8220;பூர்வி&#8230; நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. ரெண்டு மணி நேரத்துக்குள்ள ஃபோன் பண்றேன்.&#8221;</p>
<p>ஏதோ ஆபீஸ் வேலையாக அவசரமாகப் போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.</p>
<p>அவள் குளித்துவிட்டு நன்றாகத் தூங்கினாள்.</p>
<p>அவளது செல் ஃபோன் ட்ரிங்கியது.</p>
<p>எடுத்தாள். அடுத்த முனையில் கிருஷ்ணா!</p>
<p>&#8220;பூர்வி&#8230; சாரி&#8230; நீ ஒண்ணு செய்&#8230; ஒரு டாக்சி புடிச்சு&#8230;&#8221;</p>
<p>&#8220;ஐயையோ&#8230; இந்த ஊர்ல எனக்கு ஒண்ணும் தெரியாது&#8230; டாக்சி நம்பர் கூட&#8230;&#8221;</p>
<p>&#8220;நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு&#8230; நீ படிச்சப் பொண்ணு தானே? நான் சொல்ற டாக்சி நம்பரை குறிச்சு வச்சிக்கோ&#8230; ஃபோன் செஞ்சு நீ &#8216;ப்ரிமியர் இன்&#8217;ல தங்கியிருக்கேன்னு சொல்லி அட்ரஸ் விவரங்களைச் சொல்லி டாக்சி வந்ததும் ரிசப்ஷன்ல சொல்லச் சொல்லு. அவங்க ஒண்ணோட ரூமுக்கு ஃபோன் செய்வாங்க. நீ டாக்ஸில ஏறி &#8216;க்ரிப்ஸ் காஸ்வே&#8217; போகணும்னு சொல்லு. அங்க &#8216;மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்&#8217; மால் கிட்ட இறக்கி விடச் சொல்லு. அந்த கட்டடத்துக்கு உள்ளே நுழைஞ்சி லெஃப்ட்ல திரும்பி நீளமா நடந்து வந்தா அங்கே &#8216;ரிகிஸ்&#8217; என்கிற சலூன்ல நான் ஹேர் கட்டிங் செஞ்சுண்டிருக்கேன். நீ வந்ததும் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுட்டு ஹோட்டலுக்கு திரும்பிடலாம்.&#8221;</p>
<p>அவளுக்குப் பட&#8230; பட&#8230; வென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. எதற்காக இவன் என்னை இப்படி அலைக் கழிக்கறான். இவன் பேச்சைக் கேட்டு வந்திருக்கவே கூடாதோ. எப்படிப் போய்ச் சேரப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தவள் தத்தக்கா பித்தக்கா என்று வந்து சேர்ந்தாள்.</p>
<p>சொன்னமாதிரியே &#8216;ரிகிஸ்&#8217;சில் அவன் ஹேர் கட் செய்து கொண்டிருந்தான். அவளைக் குறும்பாகப் பார்த்தபடி &#8220;உன்ன இந்த ஊர்ல இருக்கிற இடங்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ட்ரெய்னிங் குடுக்கறேன்&#8221; என்றான்.</p>
<p>அவள் பதில் பேசவில்லை. &#8216;பாழாய்ப் போச்சு&#8217; என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.</p>
<p>அங்கே இருந்த வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்றவன் அவள் மலைத்துப் போகின்ற அளவிற்கு விலையில் உள்ள டைமண்ட் ரிஸ்ட் வாட்ச் ஒன்றை வாங்கினான். அவள் எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை.</p>
<p>ஹோட்டலுக்குத் திரும்பினார்கள்.</p>
<p>அவன் குளித்து முடித்தான். சாப்பிட்டார்கள். சென்ட் வாசம் ரூம் எங்கும்.</p>
<p>அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>அவளுக்குக் கூச்சமாக இருந்தது.</p>
<p>பின்பு ரிஸ்ட் வாட்சை எடுத்து அவள் கையில் கட்டினான். கையைப் பிடித்தவன் பிடித்தவன்தான்.</p>
<p>அவள் விடுவிக்க&#8230; அவன் பிடிக்க&#8230; என்ற நிலையில்&#8230; &#8220;ப்ளீஸ்&#8230; எனக்கு இதெல்லாம் பிடிக்கல&#8230;&#8221;</p>
<p>&#8220;நீ என்ன பழைய பஞ்சாங்கமா? நம்ம ரெண்டுபேர் குடும்பமும் ஆச்சாரக் குடும்பம் தான்&#8230; எனக்கும் தெரியும்&#8230; ஆனா காலம் மாறிடுச்சு&#8230; கொஞ்சம் புரிஞ்சுக்கோ&#8230;&#8221; என்றவன் அவளை நெருங்கினான்.</p>
<p>எதிர்பாராத நிலையில் அவளைக் கட்டித் தழுவியவனை அப்படியே பிடித்துத் தள்ளினாள்.</p>
<p>&#8220;மிஸ்டர் கிருஷ்ணா! கல்யாணத்துக்கு முந்தியே நீங்க இப்படிச் செய்யறது இங்க இந்த நாட்டுல எல்லாம் சரியா இருக்கலாம். ஆனா என்னால இதைக் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது.&#8221;</p>
<p>&#8220;ஏய்&#8230; நாளைக்கே நீ என்னுடைய மனைவியாகப் போகிறவள் தானே.&#8221;</p>
<p>&#8220;நான் மனைவி ஆகலன்னா?&#8221;</p>
<p>&#8220;ஏய்&#8230; நீ என்ன சொல்ற?&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8230; இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நிச்சயா நமக்கு கல்யாணம் ஆயிடும்னுல்லாம் நான் பாசிடிவா நினைச்சுட்டு இருக்க முடியாது. தயவு செய்து உடனே நான் இந்தியாவுக்குப் போக ஏற்பாடு செய்யுங்க.&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; நீ என்னை ரொம்பத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். ஒகே&#8230; ஒகே&#8230; நாளைக்கே டிக்கட் கிடைச்சதும் நீ போகலாம். நான் எப்படியாவது ஏற்பாடு செய்யறேன்.&#8221;</p>
<p>அவள் இந்தியாவுக்குத் திரும்பினாள். கல்யாணத் தேதி நெருங்கியது.</p>
<p>இரண்டு நாட்கள் முன்பாக மாப்பிள்ளை வீட்டார் சென்னை வந்து இறங்கினார்கள்.</p>
<p>வந்த உடனே கிருஷ்ணா பூர்விக்குப் ஃபோன் செய்தான்.</p>
<p>&#8220;ஹாய் டார்லிங்&#8230; எப்படி இருக்கே?&#8221;</p>
<p>&#8220;நல்ல இருக்கேன்!&#8221;</p>
<p>&#8220;கோபமெல்லாம் போச்சா?&#8221;</p>
<p>&#8220;அதெல்லாம் ஒண்ணுமில்லே&#8230; என்னோட பாதுகாப்புக்குத்தான் நான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன். தப்பா நினைக்காதீங்க.&#8221;</p>
<p>&#8220;ச்சே&#8230; ச்சே&#8230; அதெல்லாம் பரவாயில்லை&#8230; ஸீ யூ ஸூன்!&#8221;</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>பூர்வி நிம்மதியற்று அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தாள்.</p>
<p>&#8220;அப்பா&#8230; கிருஷ்ணாவோட அப்பாகிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் என்னாச்சுன்னு கேட்டீங்களா?&#8221;</p>
<p>&#8220;ஆமாமா.. கல்யாணக் கலாட்டால நான் கூட மறந்துட்டேம்மா. இதோ இப்பவே ஃபோன் செஞ்சு கேக்கறேன்.&#8221;</p>
<p>பத்து நிமிடம் கழித்து அவர் வந்தார். &#8220;பூரு&#8230; நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கறதுனால முழு டெஸ்டும் பண்ண நாள் போறாதாம். அப்படியே செஞ்சி முடிச்சாலும் மறு நாள் தான் லேப் ரிப்போர்ட் கிடைக்குமாம். அவா இதைப் பத்தி கம்ப்ளீட்டா மறந்துட்டாளாம். ‘அதனால என்ன சம்பந்தி, கல்யாணத்துக்கு மறுநாள் ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைச்சுடும்’கிறார் கிருஷ்ணாவோட அப்பா.&#8221;</p>
<p>&#8220;இல்லப்பா&#8230; கல்யாணத்துக்கு முந்தியே கிடைச்சா தான் நான் கேட்டதுக்கு அர்த்தமிருக்கும். நாளைக்குள்ள என் கைல ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கலைன்னா கண்டிப்பா கல்யாணத்தையே நிறுத்த வேண்டியிருக்கும்.&#8221;</p>
<p>அதிர்ச்சியுற்றவராக அவர் ஓடிப்போய் சம்பந்தியிடம் சொல்ல&#8230; அவர் கிருஷ்ணாவிடம் சொல்ல&#8230; என்று அவர்களுக்குள்ளே பெரிய சர்ச்சையே நடந்தது.</p>
<p>இதற்கிடையில் பூர்வியின் அப்பா கல்யாணத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.</p>
<p>என்ன அது?</p>
<p>பூர்வ காலத்து நம்பிக்கைதான்!!</p>
<p>மாபிள்ளைக்கு &#8216;சர்வாங்கம்&#8217; செய்வது என்பதுதான் அது!</p>
<p>அதென்ன சர்வாங்கம்?</p>
<p>அந்தக் கா&#8230;லத்தில் வெகு&#8230; வெகு&#8230; வருடங்களுக்கு முன் ஒரு வழக்கம் இருந்தது.</p>
<p>பெண் வீட்டார் ஏற்பாடு செய்து தர, நாவிதர் திருமணத்திற்கு முந்தின நாள் மாப்பிள்ளையின் தலையைத் தவிர சில சமயம் தலையிலேர்ந்து உடம்பு பூராவும் இருக்கின்ற முடியை மொத்தமாக மழித்து விடுவார். அப்படி மழிக்கும் போது மாப்பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. கூச்சப் படக்கூடாது. உடம்பைத் தப்பித் தவறி கொஞ்சம் நெளித்தால் கூட படக்கூடாத இடத்தில் கத்தி பட்டு விடும்&#8230;</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</p>
<p>“என்னங்க&#8230; ஏன் ஒரே டென்ஷனா இருக்கேள்?”</p>
<p>&#8220;இல்லேடீ&#8230; நேத்து தான் கும்பகோணத்துல இருக்கானே என்னோட ஃபிரண்டு நடேசபாண்டியன் ருக்மாங்கதனுக்குப்  ஃபோன் பண்ணேன். ‘சர்வாங்கம்’ பண்றவங்கள்ளாம் ரொம்பவே குறைஞ்சிட்டாங்களாம். அந்த ஊர்ல கூட ரெண்டொருத்தர் தான் இருக்காங்களாம். எப்படியும் அனுப்பி வைக்கிறேன். காலைல பத்து மணிக்கெல்லாம் வந்துடுவான்னு சொன்னான். அதான் காத்துண்டிருக்கேன்&#8230; அந்த ஆளோட பேர் கூட மணின்னு சொன்னான். நான் தப்பு பண்ணிட்டேன்னு தோன்றது கோமு. என்னோட ஃபிரண்டு, அதான் உனக்கு தெரியுமே, கிச்சா கூட &#8216;இதென்ன கேலிக் கூத்தான்னா இருக்கு, இந்த யோசனைக்கு மாப்பிள்ள ஆத்துல ஒத்துக்க மாட்டாளே&#8230; காதும் காதும் வெச்சாப்ல நாவிதனை ஊருக்கு அனுப்பி வையுடா&#8217;ன்னு சொன்னான். இதக் கேள்விப்பட்டா பூர்விக்கும் பொல்லாத கோபம் வந்துடும். அதான் மணி வந்ததும் மொதல்ல அவனை ஊருக்கு மூட்டைக் கட்டணும்னு பார்த்துண்டிருக்கேன்.&#8221;</p>
<p>அதே சமயம் – &#8220;சார்&#8230; இங்க&#8230; கல்யாணம் சார்ன்னு&#8230; ஒருத்தர்&#8230;&#8221; என்று கேட்டுக்கொண்டு மணி வந்தான்.</p>
<p>&#8220;வாப்பா&#8230; வாப்பா மணி&#8230; தப்பா நினைச்சுக்காதப்பா&#8230; இப்போதைக்கு மாப்பிள்ளைக்கு ‘சர்வாங்கம்’ செய்யறது முடியாமப் போச்சு. இந்தாப்பா, இந்தக் கவர்ல செலவுக்கு ரூபா ஆயிரம் வெச்சிருக்கேன். நீ உடனே கிளம்புப்பா&#8230;” என்றபடி அவனை அவசரப்படுத்தினார்.</p>
<p>அந்தச் சமயம் பார்த்து அங்கே வந்த பூர்வி&#8230; “யாருப்பா இவரு? என்ன&#8230; ஏதோ பணம் கூட கொடுத்த மாதிரி இருக்கு?”</p>
<p>“ஓ&#8230; அதுவா? உனக்குச் சொல்லவே இல்லை&#8230; இல்லையா? மறந்துடுச்சி.”&#8230; என்று ஆரம்பித்துத் தயங்கியவாறு&#8230; ‘சர்வாங்கம்’ பற்றி யாருக்கும் தெரியாமல் அவர் எடுத்த முடிவு பற்றி அவளிடம் தெரிவித்தார்.</p>
<p>அவள் மிகவும் அதிர்ச்சியுடன்&#8230; “அப்பா! நீங்க என்ன சொல்றேள்? நல்ல காலம் மாப்பிள்ளை ஆத்துல பகிர்ந்துக்கலை. வெளிய தெரிஞ்சா பலபேர் வாயில நீங்க விழுந்து எழுந்திருக்க வேண்டியிருக்கும். இது ரொம்ப அநியாயமா தெரியலையா ஒங்களுக்கு?”</p>
<p>“அதான், நானே வேண்டாம்னுதான் மணியை ஊருக்குப் போகச் சொல்லிட்டேனே&#8230;”</p>
<p>அதற்குள் இடைமறித்த மணி, குறுக்கிட்டு&#8230; “இல்லீங்கம்மா, இப்படிச் செய்யும்போது மாபிள்ளைக்கு இருக்கிற சில வியாதிகளை எங்களால சொல்லமுடியும். அதனால பல பொண்ணுங்களோட வாழ்க்கையை எங்க மூதாதையர்களும், ஏன் நானும் கூட காப்பாத்தி இருக்கோம். அதுக்காக எல்லா தோல் வியாதிகளையும் பாலுணர்வு தொடர்புடைய நோய்களையும் கண்டுபுடிச்சிட முடியும்னு சொல்ல வரலை&#8230;”</p>
<p>“இதோ பாருப்பா மணி&#8230; நீ சொல்றதெல்லாம் வைத்திய முறைகள் முன்னேறாத காலத்துல நடந்தது. இனி அந்த மாதிரி தவறுகள், அறியாமைகள் நடக்கக் கூடாதுன்னுதான் இந்த உலகமே போராடுது. இப்ப நிறைய படிச்ச ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், விஞ்ஞானிகள்னு பூமி விரிஞ்சிக்கிட்டிருக்கு. அதற்குன்னு பரிசோதனைச் சாலைகள் இருக்கு. முறைப்படி டாக்டர்களிடம் கேட்டுத்தான் பரிசோதனை செய்யணும்.”</p>
<p>இப்படி பூர்வி கண்டிப்புடன் சொல்வதைப் பார்த்து மணி மட்டுமல்ல, கல்யாணமும் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.</p>
<p>மணி ஊருக்கு அனுப்பப்பட்டான்.</p>
<p>“அப்பா&#8230; உடனே கிருஷ்ணா அப்பாகிட்ட பேசுங்க. நானும் கிருஷ்ணா கிட்ட பேசறேன். என்னோட கல்யாணம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை. அவர்கிட்ட சொல்லி ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்த பின்னால கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.”</p>
<p>ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்ததா?</p>
<p>கல்யாணம் நடந்ததா?</p>
<p>என்ன, ஆவலாக உள்ளதா?</p>
<p>இதன் முடிவு தான் என்ன?</p>
<p>நாம் ஏன் கவலைப் படவேண்டும்?</p>
<p>பூர்வி படித்தவள். அவள் கேட்டது நியாயமே. அவளுந்தானே அவளுடைய ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டை கொடுக்கப் போகிறாள்.</p>
<p>லேப் ரிப்போர்ட்டில் பாசிடிவ் என்று வந்தால் அவள் திருமணத்தை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.</p>
<p>அல்லது&#8230;</p>
<p>மாபிள்ளையின் நோய் குணமாகிறவரை காத்திருந்து திருமணமும் செய்துக்கொள்ளலாம்.</p>
<p>நெகடிவ் என்று வந்தால் உடனே திருமணம் நடக்கலாம்.</p>
<p>இனி அவள் பார்த்துக்கொள்வாள்.</p>
<p>நாம் யார் அவள் வாழ்க்கையில் தலையிட?</p>
<p>இனிமேல் நாம் நம்முடைய வேலைகளை கவனிக்கலாம் வாங்க.</p>
<p>வேலையை கவனிக்கப் போகின்ற என்னை யார் பிடித்து இழுப்பது&#8230;?</p>
<p>&#8220;சார்&#8230; சார்&#8230; அதுவே பூர்விக்கும் ஏதாவது பிரச்சனை ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டில் தெரிய வந்தால் நிலைமை என்னவாகும்?&#8221;</p>
<p>&#8220;என்ன சார்&#8230; இதெல்லாம் கேட்டுக்கிட்டு&#8230; மாபிள்ளைக்கு என்ன கதி ஏற்படுமோ அதே கதிதான் பெண்ணுக்கும்!&#8221;</p>
<p>சும்மா சொல்லக் கூடாது&#8230; இந்தக் காலத்துல எல்லாருமே ரொம்பத் தெளிவாத்தான் இருக்காங்க!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/">சர்வாங்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதல் இரவும் ராதாவிளயாடியும்&#8230;</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Tue, 28 Oct 2014 22:09:13 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=523</guid>
		<description><![CDATA[<p>சிறுகதை முதல் இரவு! அறை முழுவதும் பூக்களின் வாசனை. கூடவே ஊதுபத்திகளின் மணம். மூலையில் பழம் இனிப்பு வகைகளுடன் வழக்கம் போல் பால் சொம்பு! கண்ணதாசன் என்ற நான் அறை வாசற்படியை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது என் மனைவி &#8216;ராதாவிளயாடி&#8217; வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவள் அச்சம், நாணம், மடம்,&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f/">முதல் இரவும் ராதாவிளயாடியும்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<h6><span style="color: #ff0000;">சிறுகதை</span></h6>
<div style="width: 1034px" class="wp-caption alignnone"><img title="Orange Moon by david.nikonvscanon" alt="orange moon photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/10/8832032292_2da2f820f3_b_orange-moon.jpg" width="1024" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/12568962@N00/8832032292" target="_blank">david.nikonvscanon</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>முதல் இரவு!</p>
<p>அறை முழுவதும் பூக்களின் வாசனை. கூடவே ஊதுபத்திகளின் மணம்.</p>
<p>மூலையில் பழம் இனிப்பு வகைகளுடன் வழக்கம் போல் பால் சொம்பு!</p>
<p>கண்ணதாசன் என்ற நான் அறை வாசற்படியை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது என் மனைவி &#8216;ராதாவிளயாடி&#8217; வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.</p>
<p>அவள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நாலு வகைக் குணங்களுடன் மெல்ல அறையில் கால் எடுத்து வைக்கும் போது அப்படியே ஆலிங்கனம் செய்து அவளைத் திக்கு முக்காட வைக்க வேண்டும் என்று படபடப்புடன் எதிர் நோக்கி நின்றேன்.</p>
<p>இன்னும் அவள் வரவில்லை.</p>
<p>பொறுமையாகக் காத்திருந்தேன்.</p>
<p>மழை வருவதற்கான அறிகுறியாக வெளியே மின்னலுடன் லேசான குளிர் காற்றும் வீசியது.</p>
<p>ஆனால் மணப்பெண், அதுதான் என் மனைவி ராதாவிளயாடி வருவதற்கான அறிகுறி மட்டும் தெரியவில்லை.</p>
<p>திடீரென்று இடி இடித்தது&#8230;</p>
<p>தட&#8230; தட&#8230; என்று&#8230; டமால்&#8230; டுமால்&#8230; என்ற சத்தத்துடன்&#8230; புலிப்பாய்ச்சலில் ஓடி வந்து என் மேல் விழுந்தாள் ராதாவிளயாடி!</p>
<p>அவளுடைய கனம் தாங்காமல் அதிர்ச்சியுடன் நான் கட்டிலில் விழுந்தேன்!</p>
<p>எழலாம்&#8230; எழலாம்&#8230; என்று முயற்சித்தாலும் எழ முடியவில்லை. என்னவானது எனக்கு?</p>
<p>ஓ&#8230; இப்போது தான் புரிந்தது&#8230; நூறு கிலோ பெரிய அரிசி மூட்டை ஒன்று என் மேல் விழுந்தது என்று&#8230; முக்கி முனகி &#8220;அம்மா ராதாவிளயாடி! கொஞ்சம்&#8230; கொஞ்சம்&#8230; ஒன்னோட ஒடம்ப அப்படியே லேசா ரைட்டிலையோ அல்லது லெஃப்டுலையோ தள்ளி கட்டில்ல இறக்கி வையும்மா&#8230; மூ&#8230;ச்சு&#8230; தடுமாறுது&#8230; செத்துடுவேன் போல இருக்கு&#8230; சீக்கிரம் இறங்கு!&#8221;</p>
<p>முதல் அனுபவமே ரொம்ப நல்லா தான் இருக்குடீயம்மா!</p>
<p>&#8220;ஐய்யோ&#8230; ஸாரிங்க&#8230; எங்கயாவது அடிப்பட்டுடுச்சா?&#8221;</p>
<p>&#8220;எங்கயாவதா? அங்க இங்கன்னு இல்லாம ஒடம்பு பூராவுமா வலிக்குது! அதுவும் இல்லாம ஒன்னோட ஒடம்ப இறக்கி கட்டில்ல வையும்மான்னு சொன்னா திரும்பவும் என்னோட வலது கை மேல வெச்சுட்டியே, இப்போ இந்தக் கை அவுட் ஆஃப் ஆர்டர்! நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல&#8230; உன்ன வெச்சிக்கிட்டு&#8230;&#8221;</p>
<p>&#8220;ஐய்யே&#8230; திரும்பவும் ஸாரிங்க! ஆனா இந்த மாதிரி &#8216;வெச்சுக்கிட்டு-கிச்சுக்கிட்டு&#8217;ன்னுலாம் சொல்லாதீங்க! நான் ஒங்களோட மனைவியாக்கும்!&#8221;</p>
<p>&#8220;நான் அப்படி எல்லாம் தப்பா சொல்லுவேனா? என் மூடையே மாத்திட்டியே&#8230; நீ வர்றதுக்கு முன்னால நான் என்னவெல்லாம் கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன் தெரியுமா? அது சரி, ஏன் வெண்கலக் கடையில யானைப் பூந்தாமாதிரி இப்படித் திடீர்னு என் மேல வந்து விழுந்தே?&#8221;</p>
<p>&#8216;ஓ&#8230; அதுவா? சினிமாவுல வர்ற மாதிரி என் கூட தோழிகள், சொந்தக்காரங்க, அவங்க இவங்கன்னு கூட்டமா வந்துதான் இந்த அறையில என்னைக் கொண்டாந்து விடுவாங்களாம். ஏன்னா முதல் இரவாம்! &#8216;போங்கடி லூஸுங்களா&#8230; இது போய் முதல் இரவா&#8217;ன்னு சொல்லிட்டு நான் வேகமா ஓடி வந்தேனா&#8230; அப்போ பார்த்து திடீர்னு இடி இடிச்சதும் பயந்து போய் ஓடி வந்து ஒங்க மேல விழுந்துட்டேன்&#8230; ஸாரி&#8230; ஸாரி&#8230;&#8221;</p>
<p>&#8220;அதென்ன&#8230; &#8216;இது போய் முதலிரவா&#8217;ன்னு அவங்க கிட்ட சொன்னேன்கிற?&#8221;</p>
<p>&#8220;ஆமாம்&#8230; பின்ன என்ன&#8230; இது போய் முதல் இரவா? இது மாதிரி எத்தனையோ இரவுகளை நான் பார்த்தாச்சு.&#8221;</p>
<p>&#8220;அம்மா&#8230; பரதேவதை&#8230; நீ என்ன சொல்றே?&#8221;</p>
<p>என் வயிற்றில் புளி கரைந்தது!</p>
<p>&#8216;என்னத்தச் சொல்றேன்னா&#8230; உண்மையைத் தானே சொல்றேன்&#8230;?&#8221;</p>
<p>&#8220;அப்படின்னா? முதல்லேயே இந்த மாதிரி நிறைய இரவுகளைப் பார்த்திருக்கியா?&#8221;</p>
<p>&#8220;ஐய்யே&#8230; இது என்னடா வம்பாப் போச்சு&#8230; நான் மட்டுமே இல்ல, எல்லாருமே பார்த்தவங்க தான்!&#8221;</p>
<p>&#8220;மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நீ பார்த்தியாங்கறது தான் கேள்வி.&#8221;</p>
<p>&#8220;அதான் மொதல்லயே சொல்லிட்டேனே. வேற ஏதாவது கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா பேசுங்களேன்.&#8221;</p>
<p>அடிப் பாவி. ஒன்னோட பதிலைக் கேட்டப் பின்னால நான் எங்கடி இன்ட்ரஸ்டாவும்-கொன்ட்ரஸ்டாவும் பேசுறது. எதுக்கும் நாம அவசரப் படக் கூடாது. இன்னும் கொஞ்சம் பேசிப் பார்த்துப் பிறகே முடிவுக்கு வரணும்&#8230;</p>
<p>யாரு இவளுக்கு ராதாவிளயாடின்னு பேரு வெச்சாங்கன்னு தெரியலையே&#8230; பேரப் பாரு&#8230; பேரு&#8230; ராதாவிளயாடி&#8230; விளயாடி&#8230; சனியன்&#8230; சனியன்&#8230;!</p>
<p>&#8220;ஏங்க&#8230; என்ன&#8230; ஏதாவது நீங்களாவே பேசிக்கறீங்களா?&#8221;</p>
<p>&#8220;ச்சே&#8230; ச்சே&#8230; அதெல்லாம் இல்ல. சரி, ஆப்பிள் சாப்பிடறியா?&#8221;</p>
<p>&#8220;ஊஹூம்&#8230; வேண்டாம்ப்பா&#8221;</p>
<p>&#8220;திராட்சை?&#8221;</p>
<p>&#8220;ஊஹூம்&#8230;&#8221;</p>
<p>&#8220;சரி&#8230; சரி&#8230; சொம்புல இருக்கிற பாலை டம்பிளர்ல ஊத்திக் கொண்டு வா.&#8221;</p>
<p>&#8220;இந்தாங்க&#8230; பால்!&#8221;</p>
<p>&#8220;நீயும் குடி&#8230; இந்தா&#8230;&#8221;</p>
<p>&#8220;ஐய்யே&#8230; எனக்கு இந்தப் பாலு பழம் எல்லாம் எப்பப் பாரு சாப்ட்டு சாப்ட்டு போர் அடிக்குது!&#8221;</p>
<p>அடிப் பாவி அந்த அளவுக்கு&#8230; ச்சே ச்சே, நீ பெரிய விளயாடி தான்டீ!</p>
<p>இன்னும் எப்படி டெஸ்ட் பண்ணலாம்?</p>
<p>&#8220;உனக்கு பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; நிறைய&#8230; வண்டி வண்டியா இருக்காங்க!&#8221;</p>
<p>கிராதகி&#8230; என்னக் கொல்றியே!</p>
<p>&#8220;அவங்களோட வெளிய எல்லாம் போவியா?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; போவேனே!&#8221;</p>
<p>&#8220;எங்கே கூப்ட்டாலும் போவியா?&#8221;</p>
<p>&#8220;எங்கே கூப்ட்டாலும் போவேன்!&#8221;</p>
<p>&#8220;ஏன்?&#8221;</p>
<p>&#8220;ஏன்னா ஜாலியா இருக்கும்! அதுவும்&#8230; நான் சொன்னா கோவிச்சுக்கக் கூடாது&#8230;&#8221;</p>
<p>&#8220;சொல்லு&#8230; கோவிச்சுக்க மாட்டேன்&#8230;&#8221;</p>
<p>பேயே!</p>
<p>&#8220;ரொம்ப ஜாலியா இருக்கும்!&#8221;</p>
<p>என் கோபம் தலைக்கு ஏறியது.</p>
<p>&#8220;உனக்கெல்லாம் தாலி எதுக்குடீ?&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8230; எனக்கு மட்டும் போட்டுக்கணும்னு ஆசையா என்ன? எல்லாரும் கம்பெல் பண்ணாங்கன்னுதான் கட்டிக்கிட்டேன்!&#8221;</p>
<p>&#8220;சரி&#8230; பாய் ஃபிரண்ட்ஸ்ஸோட எங்கல்லாம் போயிருக்க?&#8221;</p>
<p>&#8220;ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர், சிம்லா&#8230; செம குளிர் தெரியுமா? ஏங்க&#8230; ஏங்க&#8230; நாம்பளும் போகலாமா?&#8221;</p>
<p>&#8220;ஏன்&#8230; அவங்களோட போனது ஒனக்குப் பத்தலையா? நான் வேற வேணுமா?&#8221;</p>
<p>&#8220;அதான்&#8230; அவங்களோடல்லாம் போய் வந்துட்டேனே&#8230; உங்களோட வர்றது புதுசில்லையா?&#8221;</p>
<p>&#8220;ஒனக்குப் புதுசு தான் பிடிக்குமா?&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8230; பின்னே&#8230; புதுப் பொடவ, புதுச் செருப்பு, புது நெயில் பாலிஷ்&#8230; ஏன், தொடப்பம்கூட&#8230; இப்படி எல்லாமே புதுசு தான் எனக்குப் பிடிக்கும். ஒங்களுக்கு?&#8221;</p>
<p>&#8220;எனக்கு முதல் முதல்ல கிடைக்கிற புதுசு பிடிக்கும். பழையதான புதுசு பிடிக்காது!&#8221;</p>
<p>&#8220;என்ன சொல்றீங்கன்னே புரியல&#8230;! சரி&#8230; என்ன மாதிரி ஒங்களுக்கும் கேர்ள் ஃபிரண்ட்ஸ்  உண்டா?&#8221;</p>
<p>ரொம்பத் தேவை, இந்தக் கேள்வி&#8230; இந்தச் சமயத்துல&#8230;</p>
<p>&#8220;கிடையாது!&#8221;</p>
<p>&#8220;சரி&#8230; முக்கியமான விஷயம்&#8230; மொத&#8230; மொதல்ல எனக்குப் பொடவை கட்டி விட்டது யார் தெரியுமா?&#8221;</p>
<p>குரல் கம்ம நான் கேட்டேன் &#8220;யாரு?&#8221;</p>
<p>ஐய்யோ&#8230; என்ன குண்டைப் போடப் போறாளோ தெரியலையே!</p>
<p>&#8216;சொல்லுடீ&#8230;&#8221;</p>
<p>&#8220;ரமணி தான்!&#8221;</p>
<p>கெட்டது காரியம். கண்ணதாசனான எனக்கு கண்ணெல்லாம் சுற்றத் துவங்கியது. அவள் தொடர்ந்தாள்.</p>
<p>&#8220;அப்புறம்&#8230; ஆங்&#8230; நீங்க என்னோடப் புருஷங்கிறதால ஒங்கக்கிட்ட மட்டும் சொல்றேன்&#8230; யார் கிட்டயும் சொல்லிடாதீங்க&#8230; பப்பி ஷேம் ஆயிடும். ஒரு தடவ என் பொடவைய அவிழ்த்து விட்டதும் ரமணிதான்!&#8221;</p>
<p>ஐயய்யோ&#8230; அது&#8230; நடந்திருக்குமோ?</p>
<p>&#8220;ஏய்&#8230; நேரடியா விஷயத்திற்கு வரேன்&#8230; நீ கலச்சிருக்கியா?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; நிறைய தடவ!&#8221;</p>
<p>கோபம் மூக்கு முட்ட &#8220;இப்போ சொல்லுடி, யாரோடெல்லாம் கலச்ச?&#8221;</p>
<p>&#8220;ஏன்&#8230; பாஸ்கர்&#8230; சதீஷ்&#8230; மோகன்&#8230; தனித் தனியா எதுக்குப் பேர சொல்லிக்கிட்டு&#8230; மொத்தமா எல்லாம் என்னோட பாய் ஃபிரண்ட்ஸுடன் தான்&#8221; என்று சொல்லியவள்&#8230; &#8216;ஓ&#8217; வென்று வாய் விட்டுச் சிரித்தவளாக&#8230; &#8220;ஐய்ய&#8230; அது கலச்சிக்கிறது இல்ல&#8230; கலாய்ச்சறது&#8230; ஏங்க&#8230; ஏங்க&#8230; என்னாச்சு உங்களுக்கு&#8230; ஏன் தலையைப் புடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கறீங்க? நான் சொல்றது எதுவும் உங்க காதுல விழலையா?&#8221; என்றபடி என்னைப் பிடித்து உலுக்கினாள்.</p>
<p>ஒரு மாதிரியாக நினைவு வந்தவனாக&#8230; என்ன இது&#8230; கலச்சியான்னா&#8230; கலாய்ச்சிறதுங்கறா&#8230; சரி, வேற மாதிரி கேட்டுப் பார்ப்பமே என்ற முடிவுக்கு வந்தேன்.</p>
<p>&#8220;இதப் பாரு. அம்மா விளயாடி. உன்னோட விளையாட எனக்கு தெம்பே இல்லம்மா. நொந்து போயிருக்கேன். தயவு செஞ்சி நான் கேக்கறத நல்லாப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லு. நீ வயத்தக் கழுவியிருக்கியா?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; நிறைய தடவை. ஆனால் வருஷத்துக்கு ஒரு தடவை தான்!&#8221;</p>
<p>இது என்னது. வரும் ஆனா வராதுங்கிற மாதிரி இந்த நாற வாய்ப் பொண்ணு பேசுறது ஒண்ணுமே புரியமாட்டேன்கிறது!</p>
<p>&#8220;அந்த எழவு சமாச்சாரத்துக்கு ஒன்னக் கூட்டிட்டுப் போறது யாரு?&#8221;</p>
<p>&#8220;எங்க அம்மா&#8230; இல்லேன்னா எங்க அப்பாதான்.&#8221;</p>
<p>என்னது&#8230; குடும்பமே குல விளக்குகள் தான் போல!</p>
<p>&#8220;எழவு சமாச்சாரம்னு சொல்லாதீங்க&#8230; அது ஒடம்புக்கு ரொம்பவும் நல்லது!&#8221;</p>
<p>&#8220;என்னது&#8230; ஒடம்புக்கு நல்லதா&#8230; யார் அப்படிச் சொல்றது?&#8221;</p>
<p>&#8220;வேற யாரு! எங்க அம்மா அப்பாதான்! அவங்க ரொம்ப நல்லவங்க!&#8221;</p>
<p>நாசமாப் போச்சு! நல்லவங்களாம்&#8230; சரியான நாசக்கார குடும்பம்&#8230; ஐய்யோ&#8230; இவ பேருக்கேத்த மாதிரி ரொம்பவே விளையாடறாளே!</p>
<p>இந்தச் சமயம் பார்த்து ரிசெப்ஷனுக்கு வந்த ராதாவிளயாடியின் பாய் ஃபிரண்டுகளில் ஒருவன் பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு &#8216;ஹாய்! ராதாவிளயாடி&#8230; கல்யாணம் ஆயிடுச்சு&#8230; இனிமே முந்தி மாதிரி எல்லாம் விளையாடிக்கிட்டு இருக்கக் கூடாது. மிஸ்டர் கண்ணதாசன்! இவளைக் கொஞ்சம் பத்திரமாப் பார்த்துக்கோங்க. இல்லையின்னா ஏமாத்திட்டு ரொம்பவே விளையாடிடுவா!&#8217; என்று சொன்னது எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது.</p>
<p>&#8220;இதப் பாரு ராதாவிளயாடி&#8230; மரியாதையா ரூமை விட்டு வெளியே போ!&#8221;</p>
<p>&#8220;ஐய்ய&#8230; என்ன ஆச்சு ஒங்களுக்கு? நான் ஒண்ணும் போக முடியாது!&#8221;</p>
<p>&#8220;ஏன் போக முடியாது?&#8221;</p>
<p>&#8220;ஏன்னா&#8230; இது எங்க வீடு&#8230; நீங்க வேணும்னா வெளிய போங்க&#8230;&#8221;</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;..</p>
<p>&#8220;அடிப் பாவி! எல்லாத்தையும் கெடுத்திட்டியே&#8230; நகை நட்டு பாத்திரம் சத்திரம் சாப்பாடுன்னு லட்சக் கணக்கா செலவு செய்த பணமெல்லாம் பாழடிக்கிறா மாதிரி வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வந்து நிக்கறியே&#8230; பத்தாததுக்கு முதலிரவுன்னு பால் பழங்கள்னு அதுவேற தண்டச் செலவு.&#8221; ராதாவிளயாடியின் அம்மா புலம்புகிறாள்.</p>
<p>&#8220;ஆமா இல்ல&#8230; நிறைய செலவு தான் ஆயிடுச்சி! ஆனா அம்மா நீ கவலைப்படாதே. அவர் தான் கோபிச்சிக்குனு மூட்டை முடிச்செல்லாம் கட்டின்னு இருக்காரே&#8230; போயிடுவார்&#8230; இனிமே நமக்கு தலைத் தீபாவளி, பொங்கல்னு எல்லாச் செலவும் மிச்சம்! நல்ல காலம் இப்பவாவது தப்பிச்சமே!&#8221;</p>
<p>&#8220;ஏண்டீ என் வயித்துல வந்து பொறந்தே? ஒன்னப் பொண்ணாப் பெத்ததுக்கு ஒரு குழவிக் கல்லைப் பெத்திருக்கலாம்.&#8221;</p>
<p>ராதாவிளயாடி &#8216;கொல்&#8217; என்று சிரிக்கிறாள்.</p>
<p>&#8220;பெத்த வயிறு பத்தி எரியுது&#8230; இப்ப எதுக்குடி சிரிக்கிற?&#8221;</p>
<p>&#8220;இல்ல நீ சொன்னியே, குழவிக் கல்லு, அத நீ உன் வயித்துல வெச்சிருந்தையானா வயிறு பிஞ்சிடும்! அது மட்டுமில்ல&#8230; அது என்ன மாதிரி புத்திசாலியா பேசுமா&#8230; சிரிக்குமா?&#8221;</p>
<p>ராதாவிளயாடியின் அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள்.</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;..</p>
<p>&#8220;மாப்ளை&#8230; நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க&#8230;&#8221;</p>
<p>&#8220;வேண்டாம் அத்தை&#8230; ஆளை விடுங்க&#8230; ஐயய்யோ&#8230; இந்தமாதிரிக் குடும்பத்தை&#8230;&#8221; என்று நான் முடிப்பதற்குள் என்னைத் தரதரவென்று இழுத்துச் சென்றார் என் அத்தை. அங்கே ராதாவிளயாடி நின்றுக் கொண்டிருந்தாள்.</p>
<p>&#8220;என்னோடப் பொண்ணு நடந்ததையெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டா. நாங்க முதல்லேயே எங்கப் பொண்ணு கொஞ்சம் விவரம் தெரியாதவள்னு சொல்லியிருக்கணும். எங்கத் தப்பு தான். மறந்துடுங்க.&#8221;</p>
<p>அவர் தொடர்ந்தார்.</p>
<p>&#8220;அவ நிறைய இரவைப் பார்த்திருக்கேன்னு சொன்னது பிறந்ததுலேர்ந்து அவள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிற இரவைப் பத்திதான்.&#8221;</p>
<p>&#8220;அப்போ&#8230; பால் பழம் போர் அடிக்குதுன்னு சொன்னது?&#8221;</p>
<p>&#8220;சின்ன வயசுல காலைல மாலைல பால் சாப்டுகிட்டு வர்றதையும் பழங்களைச் சாப்ட்டு வர்றதையும்தான் &#8216;எனக்கு இந்தப் பாலு பழம் எல்லாம் எப்பப் பாரு சாப்ட்டு சாப்ட்டு போர் அடிக்குது&#8217;ன்னு  சொன்னது.&#8221;</p>
<p>&#8220;பாய் ஃபிரண்ட்ஸ்ஸோட ஜாலியா இருந்தேன்னு  அவளே சொன்னாளே!&#8221;</p>
<p>&#8220;ஐயோ மாப்ளை&#8230; அவளுக்கு நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸும் உண்டு!&#8221;</p>
<p>&#8220;அவ அதச் சொல்லலியே?&#8221;</p>
<p>&#8220;நீங்க கேக்கலியே! அது மட்டும் இல்ல, எல்லாரும் சேர்ந்து தான் பிக்னிக் போவாங்க!&#8221;</p>
<p>&#8220;அப்ப இதுக்குப் பதில் சொல்லுங்க&#8230; அவளே ரமணிங்கிறவன்தான் அவளுக்கு ஒரு தடவை புடவயைக் கட்டி&#8230;&#8221; என்று நான் முடிப்பதற்குள் என் அத்தை &#8220;இன்னுமா ஒங்களுக்கு புரியல&#8230; ரமணிங்கற பேரு ஒரு ஆணாத் தான் இருக்கணுமா&#8230; பெண்ணா இருக்கக் கூடாதா&#8230; ரமணிங்கற பேர ரெண்டு பேருக்குமே வெப்பாங்க&#8230; சின்ன வயசுல அவளோட ஃபிரண்டு ரமணி செஞ்சத தான் சொல்லி இருக்கா!&#8221;</p>
<p>எனக்குக் கொஞ்சம் புரிந்தது மாதிரி இருந்தது.</p>
<p>&#8220;அப்ப&#8230; வயித்தக் கழுவினையான்னு கேட்டதுக்கு&#8230;&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; அதுவா&#8230; வருஷத்துக்கு ஒருமுறை ஹோமியோபதி டாக்டர் அலீம் கிட்ட போய் வயித்தால போறதுக்கு மாத்திரை வாங்கிக் கொடுப்போம். ஒரு நாலைந்து முறை வயித்தால போனா உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு அப்படிச் செய்வோம்! ராதாவிளயாடி சின்னவளாய் இருந்ததிலேர்ந்து செஞ்சிட்டு வர்றோம். அதைத் தான் சொல்லியிருக்கா.&#8221;</p>
<p>பெட்டியில் அடுக்கிய மூட்டை முடிச்சுக்களை திரும்பவும் எடுத்து வைத்தவாறு &#8220;ஒரே ஒரு வார்த்தை அத்தை&#8221; என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தார். அவரிடம் &#8220;ஒங்க பொண்ணு ராதாவிளயாடியை கட்டிக்கிட்டு வாழ்நாள் பூரா என்னென்ன அவஸ்தைப் படப் போறேனோ தெரியல&#8230; கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க&#8230; நான் ஒன்னு கேக்க&#8230; அவ ஒன்னு சொல்ல&#8230; எங்க வாழ்க்கை விளங்கிடும்!&#8221; என்றேன்.</p>
<p>மறுநாள்.</p>
<p>முதல் இரவு இரண்டாவது நாளிரவில் வைக்கப்படுகிறது.</p>
<p>&#8220;ராதாவிளயாடி&#8230; உனக்கேன் இந்தப் பேரு?&#8221;</p>
<p>&#8220;நான் எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கிறதனால ஸ்கூல்ல அப்படி பேரு வெச்சிட்டாங்க!</p>
<p>&#8220;உனக்கு என்னப் புடிச்சிருக்கா?&#8221;</p>
<p>&#8220;கொஞ்சம் கூடப் பிடிக்கல!&#8221;</p>
<p>அதிர்ச்சியுடன்&#8230; &#8220;என்னடீ&#8230; கதை திரும்பவும் வேற மாதிரி போகுது&#8230; சரி, ஏன் பிடிக்கலைன்னு சொல்லித் தொலை!&#8221;</p>
<p>&#8220;பின்ன? நேத்துலர்ந்து தான் ஒங்களப் பார்க்கறேன்&#8230; நேத்து வேற நான் சொன்னதையெல்லாம் தப்பு தப்பாப் புரிஞ்சுக்கிட்டு லூசு மாதிரி நடந்துக்கிட்டீங்க இல்ல?&#8221;</p>
<p>&#8220;யாரு&#8230; நானா? தேவுடா&#8230;!&#8221;</p>
<p>&#8220;அதனாலத்தான்&#8230; இனிமே நீங்க எப்படி நடந்துக்கறீங்கன்னு பார்த்துட்டு அப்புறமா சொல்றேன்&#8230; அதுவரைக்கும்&#8221; என்றவளை அப்படியே ஆலிங்கனம் செய்தேன்.</p>
<p>சும்மாச் சொல்லக் கூடாது. என் மனைவியின் கலாய்ச்சலில் சில சமயம் காய்ச்சலே வந்து விடுகிறது எனக்கு!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f/">முதல் இரவும் ராதாவிளயாடியும்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுய தர்மம்!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 28 Sep 2014 22:47:44 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=299</guid>
		<description><![CDATA[<p>சிறுகதை “அடடே கிரீஷ், எங்கடா இந்தப் பக்கம்? வா&#8230; வா&#8230; உள்ள வா.” “சும்மா தான் வந்தேன். வாடா வெளிய போலாம்&#8230; அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரலாம்.” “இல்லடா&#8230; எனக்கு வீட்ல வேல இருக்கு.” “என்னடா, எப்பப் பார்த்தாலும் உனக்கு வீடு, பொண்டாட்டி, புள்ள&#8230; இதே கதை தான்.” இப்படிச் சொன்னவன் கோபித்துக்கொண்டு &#8216;விருட்&#8217;டென்று கிளம்பிவிட்டான்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/">சுய தர்மம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<h6><span style="color: #ff0000;">சிறுகதை</span></h6>
<div style="width: 510px" class="wp-caption alignnone"><img title="March On!!! by Natesh Ramasamy" alt="park children india photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/09/6271638731_011f2d3615_park-children-india.jpg" width="500" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/19204893@N00/6271638731" target="_blank">Natesh Ramasamy</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>“அடடே கிரீஷ், எங்கடா இந்தப் பக்கம்? வா&#8230; வா&#8230; உள்ள வா.”</p>
<p>“சும்மா தான் வந்தேன். வாடா வெளிய போலாம்&#8230; அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரலாம்.”</p>
<p>“இல்லடா&#8230; எனக்கு வீட்ல வேல இருக்கு.”</p>
<p>“என்னடா, எப்பப் பார்த்தாலும் உனக்கு வீடு, பொண்டாட்டி, புள்ள&#8230; இதே கதை தான்.” இப்படிச் சொன்னவன் கோபித்துக்கொண்டு &#8216;விருட்&#8217;டென்று கிளம்பிவிட்டான்.</p>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>“ட்ரிங்&#8230;” “ட்ரிங்&#8230;”</p>
<p>“ஹலோ&#8230; யார் பேசறது?”</p>
<p>“டேய் ரமேஷ், நான்தாண்டா&#8230; கிரீஷ்! இன்னைக்கு சாயங்காலம் ஆறுமணிக்கு நேரு ஸ்டேடியம் வந்துட்றா&#8230; அங்க சினி ஸ்டார்ஸ் &#8216;நட்சத்திர இரவு&#8217;க்கு ரெண்டு டிக்கெட் எனக்குக் கிடைச்சிருக்கு.”</p>
<p>“டேய்&#8230; டேய்&#8230; ஸாரி டா, எனக்கு வீட்ல நிறைய வேலை இருக்கு. ஒண்ணு செய். ஒன்னோட மனைவியைக் கூட்டிட்டுப் போ.”</p>
<p>“எனக்குத் தெரியாதா&#8230; யாரை கூட்டிட்டுப் போகணும்னு? வைடா ஃபோனை!”</p>
<p>இந்த உரையாடலைக் கேட்ட ரமேஷின் மனைவி உமா, “ஏங்க உங்க ஃபிரண்டு தான் கூப்பிடறாரே&#8230; ஏன் எப்பப் பார்த்தாலும் அவரைத் தவிர்க்கறீங்க?” என்று கேட்க, அவன், “உனக்குத் தெரியாது அவனைப் பத்தி. அவன் ஒரு சுயநலக்காரன். என்னைக்கோ ஒரு நாளைக்கு என்கிட்ட வாங்கிக் கட்டிக்கப் போறான் பாரேன்&#8230;” என்றான்.</p>
<p>அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே போய்விட்டாள்.</p>
<p>மனைவி சொன்னது கொஞ்சம் உறுத்தலாக இருக்கவே, ஒரு நாள் கிரீஷின் வீட்டுக்குச் செல்வது என்று ரமேஷ் முடிவு செய்தான்.</p>
<p>கிரீஷின் வீட்டை நெருங்கும்போதே ஒரே சத்தம். அவனது பிள்ளைகளின் ஒரே இரைச்சல். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.</p>
<p>“உள்ளே அங்கே என்னத்தைக் கிழிக்கற&#8230; ஏண்டி இப்படி உன் புள்ளைங்க கத்தறாங்க? அடக்கத் தெரியாது?”&#8230; கிரீஷின் குரல்.</p>
<p>ரமேஷ் அவன் எதிரே போய் நின்றான்.</p>
<p>“டேய்! வாடா&#8230; வாடா&#8230; என்னடா, தெரியாம என் அட்ரஸ்ல வந்து நின்னுட்டியா என்ன?”</p>
<p>“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மாதான் ரொம்ப நாளாச்சேன்னு பார்க்க வந்தேன்.”</p>
<p>அதற்குள் கிரீஷின் மனைவி சதா, “வாங்கண்ணே! எங்க, இந்தப் பக்கம் வரவே மாட்டேங்கிறீங்க&#8230;” என்றாள்.</p>
<p>“நேரமே இல்லம்மா&#8230;” என்றவன் அவள் மிகவும் அயர்வுடன் இருப்பதைப் பார்த்து &#8220;<em>சதா</em>ங்கிற பேருக்கு ஏத்த மாதிரி சதா வேல செஞ்சுட்டே இருக்கீங்க போலிருக்கே&#8230; இந்தத் தடியன் ஒண்ணும் உதவி செய்யறதில்லையா?” என்றான்.</p>
<p>அவள் அதற்குப் பதில் சொல்லாமல், “ஒரு நிமிஷம் இருங்கண்ணா, நான் காஃபி கொண்டாறேன்&#8230;” என்றவாறு உள்ளே போனாள்.</p>
<p>“ஏண்டா&#8230; உனக்குப் புத்தி ஏதாவது இருக்கா? ஆம்பளை என்னைப் போய் அவளுக்கு உதவி செய்யலயான்னு கேக்கறியே&#8230; பொண்ணுன்னா அவதான் எல்லாத்தையும் செய்யணும். குடும்ப பாரத்தைச் சுமக்கறவளுக்குப் பேருதான் குடும்பத் தலைவி. இன்னுஞ் சொல்லப் போனா, பொட்டச்சி வேலைய பொட்டச்சியும், ஆம்பளைங்க செய்ய வேண்டிய வேலைய ஆம்பளைங்களும் செய்யணும்&#8230; தெரியுதா?”</p>
<p>“நீ என்னைக்குத் தான் திருந்தப் போறேன்னு பாக்கறேண்டா!”</p>
<p>கையில் காஃபியோடு வந்த சதா, “அது நடக்காத காரியம் அண்ணா&#8230;” என்று முடிப்பதற்குள்&#8230; “என்னடி, வாய் திமிரா&#8230; இதுவரைக்கும் என்னை எதிர்த்துப் பேசாதவ, கூட பேசறதுக்கு ஆள் கிடைச்சிட்டான்னு வாய் நீளுதா?” என்றவன், எதிர்பாராத நிலையில் ‘பளார்’ என்று அவள் கன்னத்தில் அறைய&#8230; அவள் கையில் இருந்த டம்ப்ளர் கீழே விழுந்து காஃபி சிதறுகிறது.</p>
<div>
<p>அதைக் காணச் சகியாமல் ரமேஷ் ‘சட்’டென்று கிளம்புகிறான்.</p>
</div>
<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>சென்னை, தி.நகர், நடேசன் பார்க்!</p>
<p>சின்னப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரமேஷ்&#8230; அவனைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற சிறுவர்களுக்குக் கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.</p>
<p>அப்போது மெல்ல அங்கே வந்து நிற்கிறான் கிரீஷ்.</p>
<p>அவனைக் கவனியாதவன் போல் ரமேஷ் கதை சொல்வதைத் தொடர்கிறான்.</p>
<p>அவன் கதை சொல்லி முடிக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தவன், “ஸாரி டா, அன்னைக்கு ஏடா கூடமா போயிடுச்சு&#8230; நீ கூட காஃபி குடிக்காமையே வந்துட்டே&#8230;” என்று மென்று இழுத்துப் பேசினான்.</p>
<p>“பரவாயில்ல விடுடா&#8230; காஃபியா பெருசு&#8230; நம்ம நட்புதான்!”</p>
<p>“ஆமா எல்லாம் சரி, அதென்ன இந்தச் சின்னப் பசங்களையெல்லாம் செருகி வெச்சுனு பேசிக்கிட்டிருக்கே&#8230;? அப்பப்ப அவங்களுக்கு வாய்த் தீனி வேற&#8230;”</p>
<p>“ஆரம்பிச்சுட்டியா உன் வேலைய&#8230; கொஞ்சம் எடம் குடுத்தா உன் புத்தியை காட்றியே&#8230; இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்&#8230; உனக்கு நல்லதே சொல்லத் தெரியாதா?”</p>
<p>“ஏண்டா (இளக்காரமாக)&#8230; இந்தப் பஞ்சப் பனாதைப் பசங்களோட என்னடா சகவாசம்னா&#8230; பிச்சைக்காரப் பயல்களோட&#8230;”</p>
<p>கோபம் தலைக்கேறிய நிலையில் ரமேஷ் வெடிக்கிறான்&#8230; “போதும் நிறுத்துடா! நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்&#8230; யாருடா பஞ்சப் பனாதை? நீதாண்டா. உன்கிட்ட எவ்வளவோ காசிருக்கு&#8230; என்னடா பிரயோசனம்? உன் கை உன் வாய்க்குத் தான் பிரயோசனப் பட்டிருக்கு. மத்தவங்களுக்கு பிரயோசனப் பட்டிருக்கா? ஆனா பஞ்சப் பனாதைன்னு சொல்றியே, அவங்களப் போய் பாரு&#8230; பக்கத்து வீட்ல சோறு இல்லைன்னா பகிர்ந்துக்கிறாங்க&#8230; பிச்சைக்காரங்கன்னு சொல்றியே, அவங்க கூடப் பக்கத்துல இருக்கிற பிச்சைக்காரனுக்கு சோறு கிடைக்கலைன்னா தங்க சோத்துல பாதிய அள்ளித் தர்றாங்க தெரியுமா? ஏன்&#8230; பக்கத்துல நின்னு அவனையே பார்த்திட்டிருக்கிற நாய்க்கும் கொஞ்சம் சோத்த கொடுத்துட்டு தான் சாப்பிடறான்! ஆனா நீ&#8230; என்னைக்காவது இதையெல்லாம் நினைச்சுப் பார்த்திருக்கியா? உனக்குத் தான் தருமம் தெரியல&#8230; செய்யறவங்கள ஏன் தடுக்கற? தருமத்த தடுத்தா ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம்னு கம்ப ராமாயணம் சொல்லுது. உன்னப் பெத்தவங்க இத உனக்கு சொல்லித் தந்திருக்கணும். ரத்தத்திலேயே இந்த உணர்வு இருக்கணும்&#8230; அத விடு, அவங்க இல்லைன்னா என்ன&#8230; மாடு மாதிரி வளர்ந்திருக்கியே, நாலு பேர் சொல்லக் கேட்டதில்லையா? இல்ல நல்ல புத்தகங்களைக் கூடவா படிச்சித் தெரிஞ்சிக்கல? நல்ல சினிமாக்களைப் பார்த்துக் கூட உன்னாலப் புரிஞ்சிக்க முடியலையா? அப்படியுங் கூட உனக்கு வரலன்னா, நீ மனிதன்லயே சேர்த்தியில்லை! நீ வாழ்ந்து என்ன பிரயோசனம்? நாம வாழற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கணும். உனக்கு இதெல்லாம் எங்கப் புரியப் போகுது? அன்னைக்கு எனக்கு ‘குடும்பத் தலைவி’ன்னா என்ன அர்த்தம்னு சொன்னியே, நா இப்ப கேக்கறேன்&#8230; &#8216;குடும்பத் தலைவன்&#8217;னா என்ன அர்த்தம்? யோசிச்சுப் பாரு&#8230; நீ எந்தக் காலத்துல இருக்கற? பொம்பளைன்னா இளக்காரமா இருக்கு&#8230; மனைவியோட சுக துக்கங்கள்ள பங்கு பெறுவதா சொல்லித்தான் தாலி கட்டுறோம், தெரியுமா? புரியாத வடமொழியில மந்திரங்கள சொல்றதுனால அதன் அர்த்தம் புரியல. அதனாலத்தான் அவங்கவங்க தாய் மொழியில மந்திரத்த சொல்லணும்கிறது. வேலை செய்யறதில பொட்டச்சி வேலை, ஆம்பள வேலைன்னு எல்லாம் பாகுபாடு தேவையில்லை. வீட்டுப் பொம்பள அழுதா அந்த வீடு விளங்காது&#8230; உருப்படாது. மொதல்ல உன் வீட்டைக் கவனி&#8230; மனைவிக்கு என்ன வேணும்கிறத கவனி&#8230; பிள்ளைகளைக் கவனி&#8230; நல்ல மனைவிய அலங்கோலமாக விட்டிருக்கியே, மனசாட்சி இல்லையா உனக்கு? உன்னோட சந்தோஷத்தை மட்டும் பார்த்துக்குறியே, ஒரு நல்ல நாள்னு மனைவி குழந்தைகளை எங்கயாவது அழைச்சிப் போயிருக்கியா? குடும்பத்தைக் கவனிச்சிக்குற உன் கடமையை செய்யறதுக்கு தான் ‘சுய தர்மம்’னு சொல்வாங்க. அந்த சுய தர்மமே தெரியாத உன்கிட்ட போய் &#8216;பிற தர்மத்&#8217;தைப் பேசற என்னைக் கட்டையாலத் தான் நான் அடிச்சிக்கணும். வேண்டாம்ப்பா, போதும் ஆளை விடு! என் மேல நல்ல காத்து தான் படணும். வர்றேன். குட் பை!”</p>
<p>கோபமாக ரமேஷ் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கிரீஷ்&#8230; தீவிர யோசனையுடன் வீட்டை நோக்கி நடக்கலானான். இனிமேலும் அவன் மாறாமல் இருப்பானா? நிச்சயம் மாறத் தான் போகிறான்&#8230;</p>
<p>ஏனெனில் அவனும் மனிதன் தான்!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/">சுய தர்மம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கூடும் வீடும்</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 28 Sep 2014 21:34:49 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=296</guid>
		<description><![CDATA[<p>சிறுகதை சாலையின் வெகு தூரத்தில் ஓர் உருவம் மெல்ல&#8230; மிக மெல்ல&#8230; வந்துகொண்டிருந்தது. அருகே வரவரத்தான் தெரிந்தது, ஒரு முதியவர் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார். கையில் ஒரு பை. அருகே சென்று பார்த்தேன். பையில் காய்கறிகள். கூடவே மாம்பழம் இரண்டு. சரக்&#8230; சரக்கென்று கார்களும் பஸ்களும் செல்கின்ற இந்த நகரத்தில், அதுவும் காட்டுத்தீயாக கொளுத்துகின்ற இந்த&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/">கூடும் வீடும்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<h6><span style="color: #ff0000;">சிறுகதை</span></h6>
<p style="text-align: justify;"><a title="கூடும் வீடும்" href="http://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/"><img class="size-full wp-image-375" alt="Bird-Nest" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/09/Bird-Nest.jpg" width="580" height="384" data-id="375" /></a></p>
<p>சாலையின் வெகு தூரத்தில் ஓர் உருவம் மெல்ல&#8230; மிக மெல்ல&#8230; வந்துகொண்டிருந்தது.</p>
<p>அருகே வரவரத்தான் தெரிந்தது, ஒரு முதியவர் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார்.</p>
<p>கையில் ஒரு பை. அருகே சென்று பார்த்தேன். பையில் காய்கறிகள். கூடவே மாம்பழம் இரண்டு.</p>
<p>சரக்&#8230; சரக்கென்று கார்களும் பஸ்களும் செல்கின்ற இந்த நகரத்தில், அதுவும் காட்டுத்தீயாக கொளுத்துகின்ற இந்த வெயிலில் இந்த முதியவருக்கு அப்படி என்ன தேவை&#8230; இதையெல்லாம் வாங்கவேண்டுமென்று?</p>
<p>விழப்போன அவரைச் சட்டென்று பிடித்தவாறு “எங்க போகணும்னு சொல்லுங்க&#8230; உங்க வீட்டுக்குக் கொண்டுபோய் நானே விட்டுட்றேன்.”</p>
<p>“வீடா? அது வீடில்லே, நாங்க வசிக்கும் கூடு.”</p>
<p>“சரி&#8230; சரி&#8230; சிறிசோ பெரிசோ, வாங்க போகலாம்&#8230; ஆமா இப்படித் தனியா கடைக்கு வந்திருக்கீங்களே, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?”</p>
<p>“ஏன் இல்லாம? நாலு பிள்ளைகள். ரெண்டு ஆண். ரெண்டு பெண்.”</p>
<p>“எங்க இருக்காங்க?”</p>
<p>“பையங்க ரெண்டுபேரும் இங்கதான் சென்னையில இருக்காங்க. பொண்ணுங்க ரெண்டு பேருமே பெங்களூர்ல இருக்காங்க.”</p>
<p>“ஏன், அவங்க வீட்ல நீங்க இருக்கலாமே?”</p>
<p>“பெரிய பையன் எஞ்ஜினீயர்&#8230; பெரீசா அரண்மனை மாதிரி வீடு கட்டி இருக்கான். என்ன இழவோ, எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பாத்ரூம் சரியா யூஸ் பண்ணத் தெரியலையாம்&#8230; சாப்பாட்ட சிந்தாம சாப்பிடத் தெரியலையாம்&#8230; சோஃபாவுல உக்காந்தா அங்கங்க திட்டு திட்டா அழுக்காயிடுதாம்&#8230; இப்படி நெறைய&#8230; குறைய எங்க மருமக சொல்லிக்கிட்டே இருந்தா. நீங்களும் சரி, உங்க வீடும் சரின்னு எங்க கூட்டுக்கே வந்துட்டோம்.”</p>
<p>அவரே தொடர்ந்தார்&#8230; “இப்படி ஆயிடுச்சேன்னு கேள்விப்பட்டு ரெண்டாவது மகன் ஓடோடி வந்து எங்கள அவனோட வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனான். ஒரு ஆறு மாசம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் தான் அவதி ஆரம்பமாச்சு. பெரிய மகனே பரவாயில்லை. அவனோட மனைவி தான் எங்கள வறுசெட்டியில் போட்டு வறுத்தா&#8230; ஆனா இங்க&#8230; ரெண்டாவது மகனும் அவனது மனைவியும் கொஞ்சம்கொஞ்சமா குறை சொல்ல ஆரம்பிச்சாங்க&#8230; ஒரு நாள் வந்து, “அப்பா! நானும் உங்க மருமகளும் ஒரு ஆறு மாசம் அமெரிக்கா, லண்டன் என்று சுத்திப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம். அதுவரை நீங்க போய் நம்ம வீட்லயே தங்கி இருங்க. நாங்க வந்த உடனே உங்கள அழைச்சுக்கறோம்!” என்றான்.</p>
<p>&#8220;ஓ, அதுக்கென்னப்பா, அப்படியே செய்யுங்க” என்று மனைவியை அழைத்துக்கொண்டு புறப்படும்போது, என் மனைவி&#8230; “கண்ணா! மறக்காம போற இடத்துல எல்லாம் போட்டோ புடிச்சுனு வா&#8230; பாக்கறோம். எப்படா எங்களுக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து குடுக்கப்போறே?” என்றவளை, &#8220;சரி&#8230; சரி வாடி லூசு&#8221; என்று வலுக்கட்டாயமாகத் திரும்பவும் கூட்டுக்கு அழைத்து வந்தேன். பாவம் எம்பொண்டாட்டி. புள்ள சொல்றத நம்பிக்கிட்டிருக்கா. அவங்க அமெரிக்காவும் போகல, லண்டனும் போகல. இங்கே இருக்கிற அவனோட மாமியார் வீட்டுக்குத் தான் போயிருக்காங்க என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதோ ஆறு மாசத்துக்கும் மேலேயே ஆச்சு&#8230; இன்னும் வர்றான், எங்களை அழைச்சுட்டுப் போக.”</p>
<p>“சரிங்க பெரியவரே! புள்ளைங்க தான் உங்களை வெச்சுக்கலே, ரெண்டு பொண்ணுங்களுமா வெச்சிக்க மாட்டேங்கிறாங்க&#8230;”</p>
<p>“அதை ஏன் கேக்கறீங்க&#8230; பெரிய பொண்ணு எங்கிட்ட ‘அப்பா! பெங்களூரு ரொம்பக் குளிரு ஊரு&#8230; அதனால உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்காது’ ன்னு சொல்லிட்டா&#8230; ரெண்டாவது பொண்ணு ‘கூட மாமியாரும் மாமனாரும் இருக்கிறதுனால ஒங்கள எங்க வீட்டுல சீராட முடியல&#8230; இன்னுங் கொஞ்ச காலந்தாம்ப்பா&#8230; அவங்க ரெண்டு பேரும் சீக்கிரமே மண்டையப் போட்டதும் உங்களை’ ன்னு அவ சொன்ன போதே என் மனம் பதறுச்சு&#8230; ‘வேணாம்மா, அவங்க செத்தாதான் எங்களுக்கு விடிவுன்னு சொல்றது தப்புமா&#8230; எங்களுக்கென்ன ராசா ராணி மாதிரி கை கால் நல்லா இருக்கு&#8230; பார்த்துப்போம்&#8230; அவங்கள மனங்கோணாம கவனிம்மா’ன்னு சொல்லிட்டு எங்க கூட்டுலேயே என் மனைவியோடு இருக்கிறேன். இதுல யாரக் குறை சொல்ல முடியும்?”</p>
<p>ஏதோ ஓர் இனம் புரியாத வேதனை என் நெஞ்சைப் புரட்டிப் போட்டது.</p>
<p>பெரியவர் சொன்ன விலாசத்துக்கு அருகே நான் நின்றபோது அவர் கூடு&#8230; கூடு&#8230; என்று சொன்ன இடம் மாட மாளிகையாக இருந்தது. “ஐயா பெரியவரே! நீங்க கூடுன்னு சொன்னீங்க&#8230; ஆனா என்ன இது இவ்வளோ பெரிய பங்களாவா இருக்கு&#8230;”</p>
<p>“ஆமாம்ப்பா&#8230; கொஞ்சம் பெருசுதான். இது ஒண்ணுதான் எங்ககிட்ட மீதம் இருக்கிற சொத்து. எனக்கும் பென்ஷன் வருது. ஒரு பக்கம் வாடகைக்கு விட்டிருக்கேன். பணத்துக்குப் பஞ்சமில்லை. ஆனா என்ன, குழந்தைங்க நம்ம கிட்ட நாம பாக்கறா மாதிரி இல்லையேன்னு கவலைதான். இந்தச் சொத்து வேற யாருக்கு? எல்லாம் நம்ம பிள்ளைகளுக்குத்தான். ஆ, சொல்ல மறந்துட்டேன்&#8230; பறவ கூடுங்கிறது சின்னது&#8230; மிஞ்சிப் போனா ரெண்டு பெரிய பறவைங்க, அது கூட ரெண்டு மூணு குஞ்சு பறவைங்க இருக்கலாம்&#8230; அவைகளும் பறந்துவிட்டால் அது வெறும் கூடுதான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள்னு நெறஞ்சதுதான் வீடுங்கிறது. யாருமே இல்லாத என் வீட்ட கூடுன்னு சொல்றதுதான் சரி&#8230; சரியா?”</p>
<p>“சரிதான் பெரியவரே!” என்று சொல்லிய நான், திருச்செந்தூருக்குப் போகும் பஸ்ஸை அவசரமாகப் பிடிக்க ஓடினேன்.</p>
<p>ஏனெனில், அங்குதான் ஒரு கூட்டில் என் பெற்றோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/">கூடும் வீடும்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குருப் பெயர்ச்சி!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 27 Jul 2014 07:57:01 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=114</guid>
		<description><![CDATA[<p>இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இருக்கு ஆனால் இல்லை என்பது போல்&#8230; யாருக்கும் சொந்தமில்லை என்று ஒரு சாராரும், எல்லோருக்கும் சொந்தம் என்று மறுசாராரும் சொல்லலாம். நான் மறுசாரார் பக்கம்! ஆமாம்&#8230; உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்&#8230; ஏன், உயிருள்ள சகல உயிரினங்களுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன? உணவு. உடை.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/">குருப் பெயர்ச்சி!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a title="குருப் பெயர்ச்சி" href="http://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/"><img class="size-full wp-image-183" alt="Guru-Peyarchi" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/07/Guru-Peyarchi.jpg" width="580" height="384" data-id="183" /></a></p>
<p style="text-align: justify;">இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இருக்கு ஆனால் இல்லை என்பது போல்&#8230; யாருக்கும் சொந்தமில்லை என்று ஒரு சாராரும், எல்லோருக்கும் சொந்தம் என்று மறுசாராரும் சொல்லலாம்.</p>
<p>நான் மறுசாரார் பக்கம்! ஆமாம்&#8230; உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்&#8230; ஏன், உயிருள்ள சகல உயிரினங்களுக்கும் இந்த உலகம் சொந்தம்.</p>
<p>ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?</p>
<p>உணவு.</p>
<p>உடை.</p>
<p>உறையுள் எனப்படும் வீடு.</p>
<p>வசதியுள்ளவர்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருப்பதில்லை.</p>
<p>ஓரளவுக்கு உணவு, உடை, அரசாங்கங்களின் உதவியாலோ அல்லது நல்ல உள்ளங்களின் உதவியாலோ கிடைத்துவிடுகிறது.</p>
<p>ஆனால் வீடு?</p>
<p>வெயில், மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், மனக்கொடுமையாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வீடு தேவை தானே?</p>
<p>இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?</p>
<p>எங்கே காலி இடம் உள்ளதோ அங்கே தற்காலிகமாக குடிசை போட்டுக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். இவர்களைத் தான் நாம் புறம்போக்கு நிலத்தில் வாழ்கிறவர்கள் என்று சொல்கிறோம்!</p>
<p>இதில் இரண்டு வகையினர்.</p>
<p>பலர் – பல வருடங்களாக இருப்பவர்கள்.</p>
<p>சிலர் – சில வருடங்களாக இருப்பவர்கள்.</p>
<p>எப்படியோ, கால் வயிறு, அரை வயிறு உண்டு, அரை குறை ஆடைகளையாவது குழந்தைகளுக்கு அணிவித்து, முழு வயிறு சாப்பாடு தந்து, முடிந்தவரை பள்ளிக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பார்கள்.</p>
<p>கேட்டுப் பாருங்கள்&#8230; பெருமையாக &#8220;எம்புள்ள அஞ்சாப்பு படிக்குதான்&#8221; என்பார்கள்.</p>
<p>ஏனெனில் இந்தக் காலத்தில் கல்வியின் முக்கியத்துவம் கற்றோருக்கு மட்டுமல்ல, கஞ்சி குடிப்பவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை! இருப்பதை வைத்துக்கொண்டு இன்பமாக இருப்பவர்கள்&#8230; ஆசை உண்டு&#8230; ஆனால் பேராசை கிடையாது.</p>
<p>விடுமுறை நாட்களில் கருவாட்டுக் குழம்போ அல்லது நெத்திலி மீன் குழம்போ, சாம்பாரோ வைத்துச் சாப்பிட்டு விட்டு, குறைந்த கட்டணத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு, மறுநாள் வாரத்தின் முதல் நாளை (அது தான் திங்கட்கிழமையைச் சொல்கிறேன்) கொண்டாட (திண்டாட) கிளம்பி விடுவார்கள்.</p>
<p>இதோ&#8230; இப்படி எதற்கும் கவலைப்படாமல் இருப்பவர்கள் வாழ்வில் திடீரென்று ‘இடி’ விழுகின்றது&#8230;</p>
<p>என்ன அது?</p>
<p>திடீரென்று காவலர்கள் திபு திபுவென்று அவர்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி நிற்கிறார்கள்&#8230;</p>
<p>கோட்டு சூட்டு போட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரிலும் ஜீப்புகளிலும் வந்திறங்குகிறார்கள்&#8230;</p>
<p>அதில் ஒருவர் கேட்கிறார்&#8230; &#8220;யாருப்பா இங்கே&#8230; குருங்கிறது?&#8221;</p>
<p>கூட்டத்திலிருந்து ஒரு குரல், &#8220;சார்&#8230; எம் பேர் தான் குரு!&#8230; இன்னா சார் வெஷயம்?&#8221;</p>
<p>&#8220;ஓ&#8230; அப்படின்னா&#8230; நீங்க தான் இங்க இருக்கிறவங்களுக்கெல்லாம் குருவா?&#8221;</p>
<p>&#8220;சார்&#8230; நா&#8230; வந்து&#8230;&#8221;</p>
<p>&#8220;அதாம்பா, தலைவனான்னு கேக்கறேன்&#8230;&#8221;</p>
<p>&#8220;ஆமா சார்!&#8221;</p>
<p>&#8220;அரசாங்கத்தில இருந்து உத்தரவு&#8230; இதுவரைக்கும் இந்த இடத்தைக் காலி பண்ணச் சொல்லியும் நீங்கள்ளாம் காலி பண்ணல&#8230; அதனால இப்ப&#8230; (மென்று முழுங்கிக்கொண்டே சொல்கிறார்) உங்க வீட்டையெல்லாம் இடிக்கப் போறோம்!&#8221;</p>
<p>கூட்டம் பதறுகிறது&#8230;</p>
<p>கூட்டத்தில் ஒரு வயதானப் பெண்மணி, &#8220;அய்யா&#8230; தருமதொரைங்களே&#8230; இப்டி துடுதிப்புன்னு சொன்னாக்கா நாங்க இன்னா செய்வோம்&#8230; நாங்க ரொம்ப வர்ஷமா கீறோம்&#8230; அத்னால இது அப்டியே கீட்டோம், நாங்க&#8230;&#8221; என்று அவர் முடிப்பதற்குள்&#8230; &#8220;இவங்கள்லாம் இப்படித்தாம்பா, சொன்னப் பேச்சை கேக்கமாட்டாங்க&#8230; நீங்க இடிக்க ஆரம்பிங்க&#8221; என்று ஆபீசர் சொன்னவுடன், புல்டோசர்கள் கட்டிடங்களை இடிக்க ஆரம்பிக்கின்றன&#8230;</p>
<p>அதற்குள் பதறிய குரு சொல்கிறான்&#8230; &#8220;சார், நீங்க சொல்றா மாதிரி எங்களாண்ட யாரும் சொல்லிக்கிலே&#8230; இதோ பாரு, ஆபீசர் சாரு&#8230; தம்மாத்தூண்டு டையிம் குடுத்துவுடு&#8230; அப்பால பாரு&#8230; நயினா, நாங்க ஒட்டுக்க காலி செஞ்சிடறோம். ஆனா அதுக்கு மொத வேலையா நீங்க எங்ளுக்கு வேற வால்றதுக்கு எடம், பூவாவுக்கு வலி(ழி) செஞ்சி&#8230;&#8221; என்று அவன் முடிக்கும் முன்பே&#8230; கட்டிட இடிப்புகள் தொடர்கின்றன&#8230;</p>
<p>கூட்டம் கதறுகின்றது&#8230; மண்ணில் புரண்டு புரண்டு அழுகின்றது&#8230;</p>
<p>பாவம், தலைவனான குருவுக்கும் தெரியாது வாரத்தின் முதல் நாளான திங்களன்று அவனுக்கு ‘குருப் பெயர்ச்சி’ என்பது!</p>
<p>இனி என்ன செய்யப் போகிறான் அவன்?</p>
<p>அவன் கேட்டதில் ஏதாவது தவறு உள்ளதா?</p>
<p>வசதியானவர்களுக்குக் கூட காசு கொடுத்தாலும் உடனே வீடு கிடைக்காதே&#8230; இந்த நரகத்தில்!</p>
<p>இந்த நேரத்தில் தலைவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட குரு, முதலில் இந்த இரவைக் கழிக்க கூட்டத்தினருக்கு எப்படி உதவி செய்யப் போகிறான்?</p>
<p>என்ன வழி என்று தெரியாமல் திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறானே&#8230;</p>
<p><span style="font-size: 14px; line-height: 1.5em;">இம்மாதிரியானச் செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யாருக்கோ, எங்கேயோ நடக்கின்றதைப் பற்றி நமக்கென்ன கவலை?</span></p>
<p>விடுங்கள்&#8230; நாம் சாப்பிடலாம், தூங்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், கடற்கரை போகலாம், திரைப்படம் பார்க்கலாம்&#8230;</p>
<p>ஏன், வெட்டியாகவே கூட இருக்கலாம்&#8230;</p>
<p>நம்மைப் பாதிக்காதவரை எல்லாம் சுகமே!</p>
<p>ஆனாலும் மனம் கேட்கவில்லையே. இதற்கு என்ன தீர்வு?</p>
<p>ஏழைகளுக்கு தங்க இடம் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எவ்வளவோ நல்லதைச் செய்துகொண்டிருக்கிற அரசு இதையும் கவனத்தில் கொண்டால் &#8216;எங்களுக்கு இடம் இல்லை&#8217; என்று சொல்வதையே இடமில்லாமல் ஆக்கிவிடலாம்.</p>
<p>அரசு இவற்றைச் செய்யாதா என்ன?</p>
<p>நிச்சயம் செய்யும்!</p>
<p>நம்புவோம்!!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/">குருப் பெயர்ச்சி!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
