<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rani. P. Shivan</title>
	<atom:link href="https://ranipshivan.com/category/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://ranipshivan.com</link>
	<description>ராணி. ப. சிவன் - தமிழ் எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்</description>
	<lastBuildDate>Fri, 23 Jan 2015 18:07:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
		<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
		<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=3.8.41</generator>
	<item>
		<title>பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Sun, 18 Jan 2015 19:51:46 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=661</guid>
		<description><![CDATA[<p>எங்கள் காலத்தில் ஐந்து வயது நிறைவடைந்த பிறகுதான் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் என்னையும் என் பெற்றோர் சேர்த்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே ஆர்வமிகுதியால் ஒரு சிறுகதை எழுதி அதனால் நான் கந்தலாகிப் போன கதைதான் கீழே வருவது! என் தந்தை தான் தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். அந்நாளில் அரசியல்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/">பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<div style="width: 510px" class="wp-caption alignnone"><a href="http://ranipshivan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/#.VLEcFtKsWbM"><img class=" " title="rejected by Sean MacEntee" alt="rejected photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2015/01/4495072850_c156bcf1b4_rejected.jpg" width="500" height="174" /></a><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/18090920@N07/4495072850" target="_blank">Sean MacEntee</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>எங்கள் காலத்தில் ஐந்து வயது நிறைவடைந்த பிறகுதான் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் என்னையும் என் பெற்றோர் சேர்த்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே ஆர்வமிகுதியால் ஒரு சிறுகதை எழுதி அதனால் நான் கந்தலாகிப் போன கதைதான் கீழே வருவது!</p>
<p>என் தந்தை தான் தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். அந்நாளில் அரசியல் முதற்கொண்டு உலக நடப்புகளை எங்களிடம் உரையாடுவார்.</p>
<p>வாரப் பத்திரிகைகளை படிக்கும் பழக்கம் எங்களது சீனு அண்ணாவினால் தான் ஏற்பட்டது.</p>
<p>பத்திரிகைகள் வந்த உடனேயே யார் முதலில் படிப்பது என்பதற்காக என் அக்கா சாந்தாவிற்கும் அண்ணன் விஜிக்கும் எனக்கும் இடையே பலத்தப் போட்டியே நடக்கும். சில சமயம் சீட்டுக் குலுக்கிப் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அதற்குப் பிறகு அங்கே-இங்கே என்று பத்திரிகை விழுந்து கிடப்பதைப் பார்த்து என் அம்மா &#8220;வந்தப்போ இதுக்கு இருந்த வாழ்வென்ன&#8230; இப்போ இருக்கற நெலமை என்ன!&#8221; என்று அங்கலாய்ப்பார்.</p>
<p>இப்படியாகப் பத்திரிகைகள் படித்ததின் விளைவாக என்னுள் புகைந்து கொண்டிருந்த கதை எழுதும் ஆர்வம் நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, நானா சும்மா இருப்பேன்? பேனாவை எடுத்தேன். என் கற்பனைகளை கதை மாலையாகத் தொடுத்தேன். அந்த மாலையை அப்படியே கசங்காமல் உதிராமல் &#8216;குமுதம்&#8217; இதழுக்கு அனுப்பி வைத்தேன்.</p>
<p>அப்போது எனக்கு வயது பன்னிரண்டு தான்!</p>
<p>சில நாட்கள் சென்றன&#8230;</p>
<p>&#8220;போஸ்ட்!&#8221;. திடீரென்று ஒரு குரல்.</p>
<p>என் தந்தை தான் அதை வாங்கினார். என் நல்ல காலம், அம்மா உள்ளே ஏதோ வேலையாக இருந்தார்.</p>
<p>&#8220;என்னம்மா இது?&#8221; என்று சொல்லியவாறே அந்தக் கவரை என்னிடம் கொடுத்தார். கவரின் மேலேயே(!!) இருந்த <strong>&#8216;பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்&#8217;</strong> என்ற முத்திரை என்னைப் பார்த்துச் சிரித்தது!</p>
<p>நான் படபடப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்ட போது, என் தந்தை திரும்பவும் கேட்டார்&#8230;</p>
<p>&#8220;என்னம்மா அது&#8230; ராணி?&#8221;</p>
<p>&#8220;இல்லப்பா&#8230; (தயங்கியவாறு)&#8230; நான் ஒரு கதை எழுதி குமுதத்துக்கு அனுப்பியிருந்தேன்&#8230; அதைத் திருப்பி அனுப்பி இருக்காங்க.&#8221; என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு உள்ளே போக முயற்சித்தேன்.</p>
<p>&#8220;கதையா? எங்க, குடு பாக்கலாம்!&#8221;</p>
<p>&#8216;பார்க்கலாம்&#8217; என்பது அவர் வார்த்தையில் &#8216;படிக்கலாம்&#8217; என்று அர்த்தம் என்பது அவர் படிக்க உட்கார்ந்தபோது தான் எனக்குப் புரிந்தது!</p>
<p>சட்டதிட்டமாக உட்கார்ந்து கண்ணாடிப் போட்டுக்கொண்டு நிதானமாக அவர் வாசிக்க ஆரம்பித்த போது&#8230; சத்தியமாகச் சொல்கிறேன், நான் பட்ட அவஸ்தை அதற்குப் பிறகு நான் குழந்தை பெற்றபோது ஏற்பட்டத் தவிப்பைவிட சொல்லமுடியாத அவஸ்தை&#8230; அவஸ்தையிலும் அவஸ்தை.</p>
<p>&#8216;பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்&#8217; என்ற வாசகத்தில் அவர்கள் வருந்துகிறார்களோ இல்லையோ, அதைப் பெறுகின்றவர்கள் வருந்துகின்ற வருத்தம் இருக்கிறதே&#8230; சொல்லி மாளாது, சொன்னால் புரியாது!</p>
<p>என் தந்தை &#8216;படிக்கப்படிக்க&#8217; என் நெஞ்சு &#8216;படபட&#8217;வென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.</p>
<p>வீட்டிலுள்ள ஹாலுக்கும் நடைக்கும் என்று மாற்றி மாற்றி திரிந்துகொண்டிருந்தேன். ஐயோ! இந்தக் கதையைப் படித்தால் அப்பா&#8230; என்னைப்பற்றி என்ன நினைப்பார்? கதையில் வரும் கதாநாயகியைப் போல்தான் நானும் என்று நினைத்து விடுவாரே! சத்தியமாக நான் அப்படி நடக்க மாட்டேன் என்று அவருக்கு எப்படிச் சொல்வது? யார் சொல்வது? அல்லது எப்படிப் புரியவைப்பது?! மேலும் நான் எப்படிப்பட்ட கதையை எழுதியிருக்கிறேன் என்பது என் அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான்&#8230; என் தாவு தீர்ந்துவிடும்! உயிருக்குயிரான என் அம்மா என்னைக் கொன்றே போட்டுவிடுவாரே! ஐயோ கடவுளே! நான் தெரியாமல் இப்படி ஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு. சத்தியமாக இனிமேல் நான் இந்த மாதிரி கதையெல்லாம் எழுதமாட்டேன். விநாயகா &#8211; ஒரு இரண்டணாவுக்கு (அந்தக் காலத்தில் அதிக காசுதான்!) கற்பூரம் வாங்கி உனக்கு ஏற்றிவிடுகிறேன்! (இந்த மாதிரி இரண்டணா கற்பூரங்கள் விநாயகருக்கு நான் நிறைய பாக்கி வைத்திருக்கிறேன்!)</p>
<p>அப்பா படித்து முடித்து விட்டாரா என்று மெல்ல எட்டிப் பார்த்தேன். ஊஹூம். அவர் படித்தார்&#8230; படித்தார்&#8230; படித்துக்கொண்டே இருந்தார். நிச்சயாமாக நான் தொடர்கதை எழுதவில்லை&#8230; சிறுகதைதான் எழுதியிருந்தேன். நெஞ்சு படபடக்க திரும்பவும் திரும்பவும் தவிப்புடன் அங்கேயும் இங்கேயும் நடக்கத் தொடங்கினேன்.</p>
<p>நடுநடுவில் என் அம்மா ஏதோ பேசினார். இப்போது நினைவில் இல்லை! அப்போதும் என் நினைவில் இருந்திருக்காது! ஏனெனில் நான் அரண்டு மிரண்டு போயிருந்த நேரம் அது.</p>
<p>திரும்பவும் என் கற்பனைகள் என்னை கலங்கடித்தன. என் தந்தை நான் எப்படிப்பட்ட சிறுகதை எழுதியிருக்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது திரைப்படம் போல் விஷூவலாக நான் பார்க்க முடிந்ததில் சின்னாபின்னமாகிப் போனேன்.</p>
<p>என் தாய் ஓர் அற்பப் புழுவாக என்னைப் பார்ப்பது போலவும் ஏகத்துக்கும் என்னை ஏசுவது மாதிரியும் கண்டு திண்டாடிப் போனேன்.</p>
<p>ஏனெனில் சாதாரணமாக தந்தை எங்களையெல்லாம் எப்போதுமே எதுவும் கேட்கமாட்டார். கண்டிக்க மாட்டார். அவரின் உருவமும் ஒரு மரியாதைக்கான உருவமாக இருக்கும். அந்தக் காலத்திலேயே அவரை &#8216;ஜென்டில்மேன்&#8217; என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.</p>
<p>பிற்காலத்தில் மெத்தை போட்ட வில் வண்டியில் அவர் கம்பீரமாக ஏறி அமர்ந்து செல்வதைப் பார்க்கவே அழகாக இருக்கும். வில் வண்டியின் சத்தம் மத்தியான நேரங்களில் கேட்டாலே பெரும்பாலும் சரியாக மணி ஒன்றரை இருக்கும் என்று என் பள்ளித் தோழிகள் சொல்லும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். தவறாமல் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொள்வதைப் பார்த்து &#8216;நம்ப எம்.ஜி.ஆர். போகிறார்ப்பா&#8230;&#8217; என்பார்கள். விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்துடன் நிமிர்ந்தப் பார்வையோடு குடும்பச் சண்டைகளை நொடிப்பொழுதில் தீர்த்து வைப்பதிலாகட்டும், ஏழைகளுக்கு பகட்டின்றி கல்வி தர முயன்றதாகட்டும், பதவிகள் தேடிவந்த போதும் அதை மறுத்ததாகட்டும், தருமத்தை எங்கள் தலையில் ஏற்றியதாகட்டும், எல்லா விதத்திலும் ஓர் ஒப்பற்றத் தந்தையாக இருந்து எல்லா பண்புகளையும் அன்புகளையும் நாங்கள் அரவணைக்கக் காரணமானவர். ஆரம்ப காலங்களில் என் தந்தை நீதிக் கட்சியில் (Justice Party) இருந்து, பின் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தைப் பெரியார் அவர்களிடம் இருந்து பிரிந்த உடனே 1949-ல் வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பட்டி தொட்டியெல்லாம் திரண்டுவரும் அளவிற்கு நண்பர்கள் திரு.தரும கவுண்டர், திரு. பொன்னுசாமி கவுண்டர் அவர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் மாநாடு நடத்தியவர்! மேடையில் நகைச்சுவை வேந்தர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கடத்தைத் தட்டிக்கொண்டே பாடியது நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் காலத்திலேயே குடுமி தேவையில்லை என்று கிராப் வைத்துக்கொண்டவர்!</p>
<p>அதனாலேயே இப்படிப்பட்ட தந்தையின் மதிப்பில் நான் குறைந்துவிடுவேனோ என்ற தவிப்பு என்னைத் தடுமாறச் செய்தது.</p>
<p>என் அம்மா அப்படியே அப்பாவிற்கு நேர் எதிர். கொளுத்திப் போட்ட ஊசிப் பட்டாசுதான்! படபடவென்று வெடிப்பவர். அப்போதைக்கு அப்போதே பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்! முகத்துக்கு நேராக எதையும் கேட்டு எகிறிவிடுவார்! அந்தக் கால பெண்மணி என்பதால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். குற்றம் செய்தவர் யாராயினும் குற்றவாளிக் கூண்டில் நின்றே ஆகவேண்டும். அன்பை ஆறாக&#8230; இல்லை இல்லை&#8230; கடலாக&#8230; இல்லை இல்லை&#8230; வானமாகக் காட்டித் திக்குமுக்காட வைப்பவர். அவர் மடியில் நாங்கள் புரண்ட காலத்தை மறக்கமுடியுமா? நான் எம்.ஏ. படிக்கும்போது கூட எங்கள் ஐந்து பேருக்கும் சோறு ஊட்டியவர். ஆனால் தவறு என்று வரும்போது ரொம்பவுமே ஸ்ட்ரிக்ட் ஆனவர்.</p>
<p>ஹூம். இந்தச் சிறுகதையை நான்தான் எழுதினேன் என்று தெரிந்தால் அவர் எவ்வளவு வருத்தப்படுவார் என்பதுடன்&#8230; வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் முதுகில் &#8216;டின்&#8217; கட்டிவிடுவார் என்ற பயமும் ஆட்டிப்படைத்தது!</p>
<p>&#8220;எப்படியெல்லாம் வளர்த்தேன்&#8230; இப்படி எழுதிவிட்டாயே&#8230;?&#8221; என்று நினைப்பதுடன் விடமாட்டாரே&#8230; &#8220;எப்படி இப்படி எழுத உனக்கு மனத்துணிவு வந்தது?&#8221; என்று வேறு கேட்பாரே&#8230; இதற்கு நான் என்ன பதில் சொல்வது! எப்படிச் சொல்லப்போகிறேன்? என்னால் நிச்சயமாக உண்மையான பதிலைச் சொல்லமுடியும்&#8230; சொல்லுவேன்&#8230; ஆனால் அம்மா அதை ஏற்றுக்கொள்வாரா?</p>
<p>அது கிடக்கட்டும். அப்பா படித்து முடித்துவிட்டாரா&#8230; எட்டிப் பார்க்கிறேன்! ம்ஹூம்&#8230; இன்னும் முடிக்கவில்லை. &#8216;ஐயோ&#8230; அப்பா! என்னப்பா&#8230; எழுத்துக் கூட்டியா படிக்கிறீங்க&#8230; சீக்கிரம் படிங்களேன்&#8230; என் கஷ்டம் எனக்கு. அவர் சரியாகத்தான் படித்துக்கொண்டிருந்தார்!&#8217;</p>
<p>திரும்பவும் திரும்பவும் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து என் கழுத்து ஒட்டகச் சிவிங்கி போல் அப்போது நீண்டிருக்குமோ?</p>
<p>அப்பாடா! ஒருவழியாக படித்து முடித்து விட்டார்! ஆஹா&#8230; என்ன மகிழ்ச்சி! விறுவிறுவென்று அவரை நோக்கிச் சென்றேன்.பலிஆடுபோல் இருந்தேன். என்ன சொல்லப் போகிறாரோ என்று திருதிருவென்று முட்டைக் கண்கள் பிதுங்க விழித்தவாறு நிற்க&#8230; அவர் &#8220;இந்தாம்மா!&#8221; என்று கதைத் தாள்களைக் கொடுத்துவிட்டு, இயல்பாக&#8230; மிகவும் இயல்பாக&#8230; அவரது வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்!</p>
<p>நான் திகைத்து நின்றேன். என்னால் நம்பவே முடியவில்லை!</p>
<p>அன்றைக்கு மட்டுமல்ல&#8230; அதற்குப் பிறகு வந்த நாட்களில் கூட அவர் அந்தக் கதையைப் பற்றி ஒன்றுமே கூறவுமில்லை கேட்கவுமில்லை. அப்படியும் என்றோ ஒருநாள் என் அம்மாவிடம் இதைச் சொல்லப் போகிறார்&#8230; அதனால் பூமி கிடுகிடுக்கப் போகிறது என்று பலநாட்கள் காத்திருந்தேன்.</p>
<p>ஊஹூம். ஒன்றுமே நடக்கவில்லை!</p>
<p>அதை நினைக்கும் போதெல்லாம் என் தந்தை உண்மையாகவே ஒரு &#8216;ஜென்டில்மேன்&#8217; தான் என்று நினைத்து மகிழ்வதுண்டு.</p>
<p>சரி&#8230; ஒரு சின்னக் கதையை எழுதிவிட்டு நான் ஏன் இப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டேன்?</p>
<p>அப்படி என்னதான் அந்தக் கதையில் இருந்தது?</p>
<p>இருபது நூறாண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் காதல் திருமணங்கள் கிழிந்த நிலையில் இருக்கும்போது&#8230; சுமார் ஓர் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன்பே காதலர்கள் குடும்பத்தின் அனுமதி கிடைக்காததால் ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் அவர்களாகவே சென்று திருமணம் செய்துக்கொள்வதுபோல் கதை எழுதியிருந்தேன்! இது இப்போது மிகச் சாதாரண ஒரு கதைதான். ஆனால் அப்போது அது தலையைப் பலியாக எடுக்கக் கூடிய கதை! அக்காலத்தில் குமுதத்தின் தாக்கம் எனக்கு அதிகம் இருந்தது. ரெஜிஸ்ட்ரார் திருமணம் என் குடும்பத்தில் உறவினர் ஒருவர் அப்போது செய்திருந்தார். அதைக் கதையில் சேர்த்துக் கொண்டேன். அப்படியே ஈயடிச்சான்-காப்பி மாதிரியான ஒரு கதை!</p>
<p>புரட்சிகரமாக கதை எழுதிவிட்டதாக நினைப்பு! இன்னொன்று&#8230; யாருக்கு தெரியப் போகிறது என்று நினைத்தேன்! கதையைத் திருப்பி அனுப்புவார்கள் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது!</p>
<p>முக்கியமாக&#8230; நான் அந்தக் கதையில் வரும் கதாநாயகி போல் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்வேன் என்று பெற்றோர்கள் நினைத்துவிடுவார்களே என்பதுடன்&#8230; பன்னிரண்டு வயதிலேயே இப்படி எழுதிவிட்டேனே என்று என் அம்மா நினைத்து விடுவார் என்ற கவலை தான் என்னை வாட்டி எடுத்துவிட்டது! நல்ல காலம். என் தந்தை என்னைக் காப்பாற்றி விட்டார்! (ஏழு வயதிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா&#8230; நீங்கள் நினைப்பதுபோல் அது காதல் கதையல்ல, துப்பறியும் கதை!)</p>
<p>இப்போதெல்லாம் சிறுவயதிலேயே எழுத்தாளர் ஆவதெல்லாம் போற்றப்படுகிறது. போதிய வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.</p>
<p>விளையும் பயிரின் ஆர்வம் தெரியாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்களே&#8230; பாவம் நான்!</p>
<p>&#8216;பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்&#8217; என்கிற முத்திரையுடன் கதைகள் திரும்பி வந்தால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளர் ஆகப்போகிறீர்கள் என்பதற்கு அதுதான் முதல் படி!</p>
<p>ஏறுங்கள்&#8230; நீங்களும் ஏறுங்கள்!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/">பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தது&#8230;</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 02 Dec 2014 21:10:29 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=587</guid>
		<description><![CDATA[<p>சென்ட்ரல் ஸ்டேஷன். லண்டனில் இருந்து தோழி சாந்தா சென்னை வந்திருந்தாள். புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் தீவிர பக்தையான சாந்தா, பாபாவின் பிறந்தநாளன்று பெங்களூருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சென்னை வரும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டில் தங்குவாள். அவளை ஷதாப்தி ரயிலில் ஏற்ற விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் நானும் எனது பெரிய பெண் கவிதாவும் சென்ட்ரலுக்குச் சென்றோம்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf/">சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தது&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<div style="width: 510px" class="wp-caption alignnone"><img title="Chennai Central at night by PlaneMad" alt="chennai central photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/12/4284578193_c8c8cf2bd8_chennai-central.jpg" width="500" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/11855965@N00/4284578193" target="_blank">PlaneMad</a> <a title="Attribution-ShareAlike License" href="http://creativecommons.org/licenses/by-sa/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>சென்ட்ரல் ஸ்டேஷன்.</p>
<p>லண்டனில் இருந்து தோழி சாந்தா சென்னை வந்திருந்தாள்.</p>
<p>புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் தீவிர பக்தையான சாந்தா, பாபாவின் பிறந்தநாளன்று பெங்களூருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.</p>
<p>சென்னை வரும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டில் தங்குவாள்.</p>
<p>அவளை ஷதாப்தி ரயிலில் ஏற்ற விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் நானும் எனது பெரிய பெண் கவிதாவும் சென்ட்ரலுக்குச் சென்றோம்.</p>
<p>அங்கே பிளாட்ஃபாரத்தில் இருந்த பெஞ்சில் நல்ல முழு மேக்கப்புடன் சிவந்த நிறமுள்ள வட இந்தியப் பெண்மணி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் கூட வாட்டசாட்டமாக அவரது கணவரும் இருந்தார்.</p>
<p>இருவரும் மாற்றி மாற்றி இந்தியாவில் உள்ளக் குறைகளைச் சுட்டிக் காட்டி ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.</p>
<p>திட்டுவது சரி&#8230; ஆனால் ஏன் மெனக்கெட்டு உணர்ச்சிகளைக் கொட்டிப் பேசி உடம்பைக் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.</p>
<p>ரொம்ப டென்ஷனாக இருந்தார்கள்.</p>
<p>இடையில் அவரது கணவர் ஏதோ வேலையாக எழுந்து போனார்.</p>
<p>ரயில் வருவதற்கு நிறைய நேரம் இருந்ததனாலும் ஏற்கெனவே காலில் சுளுக்குடன் முந்தினநாள் காய்ச்சலும் இருந்ததால் அந்தப் பெஞ்சில் உட்காரலாம் என்று நான் போனேன்.</p>
<p>உட்கார்ந்தும் விட்டேன்!</p>
<p>ஏற்கெனவே உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சத்தமாக வசை பாட ஆரம்பித்தார். &#8220;போன என் கணவர் வந்தால் உட்கார வேண்டும். அதுமட்டுமல்ல, என் பையனும் இதோ வந்திடுவான். அதுக்காகவே நான் இந்த இடத்தைப் புடிச்சி வெச்சிருக்கேன்&#8230; உட்காராதீங்க&#8230; எழுங்க&#8230;&#8221;</p>
<p>இப்படி அவர் சொன்னதும் என் பெண் கவிதா &#8220;பாருங்க&#8230; எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல, இப்ப நீங்க மட்டும் தானே உட்கார்ந்து இருக்கீங்க&#8230; கொஞ்ச நேரம் உட்கார விடுங்க&#8221; என்றாள்.</p>
<p>&#8220;உங்களுக்கு நான் சொல்றது புரியலையா? இப்பவே என் பையனும் கணவனும் வந்தா எங்கே உட்காருவாங்க?&#8221;</p>
<p>நான் அப்போது குறுக்கிட்டு, &#8220;கவலையேபடாதீங்க&#8230; அவங்க வந்ததும் கண்டிப்பா நான் எழுந்திடறேன்&#8221; என்றேன்.</p>
<p>ஊஹூம்&#8230; அந்த அம்மா நாங்கள் சொன்னதையே காதில் போட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டே இருந்தார். அதனாலேயே நானும் விடாப்பிடியாக உடக்கார்ந்துக் கொண்டிருந்தேன்.</p>
<p>எங்கோ சென்ற அவரது கணவரும் பையனும் திரும்பி வந்தார்கள்.</p>
<p>நான் எழுந்துக் கொண்டேன்.</p>
<p>அப்போது பார்த்து ரயில் வந்து பிளாட்ஃபாரத்தில் நின்றது.</p>
<p>திடீரென்று ஓர் அதிர்ச்சி&#8230;!</p>
<p>ரயில் பெட்டியில் ஏறப்போன அந்த வட இந்தியப் பெண்மணி மயங்கிக் கீழே விழுந்து விட்டார்!</p>
<p>இதைப் பார்த்த நாங்களும் அதிர்ச்சியுற்று உடனே செயல்பட ஆரம்பித்தோம். என் பெண் கவிதா ஓடிப்போய் உடனே அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து &#8220;இதோ பாருங்கம்மா&#8230; ஒண்ணும் பதட்டப்படாதீங்க&#8230; அப்படியே மூச்சை நல்லா உள்ளிழுத்து மெல்ல நிதானமா வெளியே விடுங்க&#8221; என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போதே நான் &#8220;கவி! நான் போய் உடனே டாக்டர கூட்டிட்டு வரேன். நீயும் சாந்தா ஆன்ட்டியும் அந்த அம்மாளைக் கவனிச்சுக்கோங்க&#8221; என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.</p>
<p>பாரதிராஜாவின் &#8216;புதிய வார்ப்புகளி&#8217;ல் வந்த நடிகர் சந்திரசேகரைப் போல் காலில் முந்தின நாள் இருந்த சுளுக்கின் காரணமாக நான் &#8216;லொடுக்குப் பாண்டி&#8217; நிலையில் இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது&#8230;!</p>
<p>நடக்கிறேன்&#8230; நடக்கிறேன்&#8230; (விந்தி&#8230; விந்திதான்!) சென்ட்ரலின் முன்பகுதி வரவே மாட்டேன் என்கிறது! அப்போதுதான் பிளாட்ஃபாரம் ரொம்ப நீ&#8230;ளம் என்பது புரிந்தது. எரிச்சலாக இருந்தது.</p>
<p>என்ன அவசரமாக நடந்தாலும் தூரம் விடியவில்லை.</p>
<p>எட்டி&#8230; எட்டிக் காலை வைத்தால் முட்டி வலிக்கிறது.</p>
<p>அந்த அம்மாளின் நிலையை நினைத்தாலோ பாவமாக இருந்தது.</p>
<p>உலகத்தில் உள்ள கடவுளரை எல்லாம் (அவர்கள் என்னென்ன வேலையில் பிசியாக இருந்தார்களோ தெரியாது!) அந்த அம்மாளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொண்டு ஒரு வழியாக அவசர உதவிக்காக இருந்த டாக்டரின் அறையை அடைந்தேன்.</p>
<p>அறையில் இருந்தவரிடம் நான் பதற்றமாக &#8220;ஒரு அம்மா மயக்கமா கீழே விழுந்துட்டாங்க&#8230; டாக்டர் எங்கே? சீக்கிரமா கூப்பிடுங்க. ரொம்ப அவசரம்&#8221; என்றேன்.</p>
<p>மாடிக்குச் சென்றுவிட்டுக் கீழே வந்தவர் சர்வ சாதாரணமாக&#8230; &#8220;டாக்டர்லாம் வரமுடியாது. வேணும்னா நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க&#8221; என்றாரே பார்க்கலாம்!</p>
<p>ஓர் உயிருக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை சிறிது கூட இல்லாமல், அபாய நேரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் சாவதானமாக பேசுகின்ற ஆளிடம் நானும் அதேபோல் நிதானமாகப் பேசிக்கொண்டு இருக்க முடியாது என்பதால்,&#8221;இதோ பாருங்க. நான் ஒரு பத்திரிகைக்காரி. போய் உங்க டாக்டர் கிட்ட கேளுங்க&#8230; மயக்கமா விழுந்து கிடக்கிற ஒருத்தர நீங்க இருக்கிற இடத்துக்கு எப்படி கூட்டிட்டு வரமுடியும்னு? இப்போ டாக்டரால வரமுடியுமா முடியாதா? அந்த அம்மாளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா&#8230; இந்த விஷயத்தை அப்படியே விடமாட்டேன். சீக்கிரம் மாடிக்குப் போய் டாக்டர கூட்டிட்டு வாங்க&#8221;.</p>
<p>நான் போட்ட சத்தத்திலும் பத்திரிகைக்காரி என்ற வார்த்தையையும் கேட்டு அடுத்த நிமிடம் டாக்டர் தட&#8230; தடவென்று மேலேயிருந்து கீழே இறங்கி ஓடி வந்தார்.</p>
<p>வேக&#8230; வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.</p>
<p>டாக்டரும் கூடவே உதவிக்கு வந்த ஆளும் என்னைத் தாண்டி வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.</p>
<p>லொடுக்குப் பாண்டியான நான் என்ன முயற்சி செய்தும் அவர்களுடன் சமமாக நடக்க முடியவில்லை!</p>
<p>மனதில் இருந்த வேகத்தை உடம்பில் எவ்வளவு கூட்டிப் பார்த்தும் என் வேகம் என்னவோ ஆமையளவுதான்!</p>
<p>அவர்களுக்கும் எனக்கும் ஒரு நூறடி வித்தியாசம் இருந்துகொண்டே இருந்தது.</p>
<p>நாங்கள் செல்வதற்குள் ரயில் பெட்டியில் மயக்கமுற்ற பெண்மணியின் குடும்பத்தாருடன் என் பெண் கவிதா பேசிக்கொண்டிருந்தாள்.</p>
<p>டாக்டர் அந்த அம்மாளைப் பரிசோதனை செய்தார். &#8220;ஒன்றும் பயப்பட வேண்டாம். இப்போது எல்லாம் நார்மல் தான். பெங்களூர் போனதும் டாக்டரிடம் சென்று பீ.பி., சர்க்கரை இதெல்லாம் செக் செய்துக் கொள்ளுங்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை.&#8221; என்றதும் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.</p>
<p>நல்ல உறக்கத்திலிருந்த டாக்டர் ஏற்கெனவே கூப்பிட்டவுடன் தான் வரவில்லையே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு நன்றி சொல்லியபோது &#8216;அவசர காலத்தில் யார் என்ற பேதமில்லாமல் செயல்படவேண்டும்&#8217; என்பதை நாசுக்காகவே சொன்னேன். முற்றிலும் உணர்ந்தவர் போல் கேட்டுக்கொண்டார்.</p>
<p>நான் அடுத்தப் பெட்டியில் இருந்த டி.டி.இ.யை அழைத்து வந்து வடநாட்டுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டி அவருக்கு நேர்ந்ததைச் சொல்லி, &#8220;தயவு செய்து இந்தப் பெட்டியிலோ அல்லது வேறு எந்தப் பெட்டியிலோ டாக்டர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உங்கள் சார்ட்டில் பார்த்துத் தப்பித் தவறி இந்த அம்மாளுக்குத் திரும்பவும் இதுமாதிரி ஏற்பட்டால் உடனே கவனியுங்கள்&#8221; என்று வேண்டுகோள் வைத்தேன். டி.டி.இ. நல்ல மனிதர். &#8220;கவலையேபடாதீங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்தீங்க&#8230; இனிமேல் நாங்க பார்த்துக்கறோம். அதுவும் இல்லாம எந்த உதவின்னாலும் எங்கிட்ட கேக்கச் சொல்லுங்க. நான் போய் டாக்டர் யாராவது இருக்காங்களா என்று பார்த்து வைக்கிறேன்&#8221; என்றாரே பார்க்கலாம்!</p>
<p>எல்லாம் முடிந்தவுடன்&#8230; அந்த வடநாட்டுப் பெண்மணி, அவரது கணவர், மகன் மூவரும் நன்றிப்பெருக்குடன் என் பெண் கவிதா மற்றும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்க &#8220;ஆப் மாஃப் கர்தீஜியே&#8230; ஆப் மாஃப் கர்தீஜியே&#8230; என்றவர்கள் தொடர்ந்து&#8230; &#8220;தப்பா நினச்சுக்காதீங்க&#8230; நாங்க தப்பு செஞ்சிட்டோம். அவசரத்துக்கு நீங்க இந்த அளவு உதவி செய்வீங்கன்னு நாங்க நினைக்கலை&#8221; என்று ஆங்கிலத்தில் கூறியபோது, நான் கூறினேன், &#8220;பரவாயில்லை. உலகத்துல நமதுன்னு நினைக்கிற குழந்தைகள், பெற்றோர், வீடு, சொத்து, சுகம்னு எதுவுமே நம்ம கிட்ட கடைசி வரைக்கும் இருக்கப் போவதில்லை. இதுல நடுவுல வந்து போகிற ரயிலோ, பஸ்ஸோ, நாம உட்கார்ந்திருந்த பெஞ்சோ மட்டும் நிரந்திரமா என்ன? நிச்சயமா இல்ல&#8230; முடிந்த வரைக்கும் நாம மத்தவங்களுக்கு உதவியா இருந்தா எப்போதும் நல்லதே நடக்கும். ஒங்களையும் தப்பு சொல்ல முடியாது. ஒங்களுக்கும்&#8230; ஒடம்பு சரியில்லை போலிருக்கு&#8230; பரவாயில்லை, ஒடம்பைப் பார்த்துக்கோங்க.&#8221;</p>
<p>இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தோழி சாந்தா, &#8216;அப்பாடா&#8230; எல்லாம் நல்லபடியாக முடிந்தது&#8217; என்ற அர்த்தத்தில் பெருமூச்சுடன் கையசைக்க, ஷதாப்தி எக்ஸ்பிரஸ் புஸ்&#8230; புஸ்&#8230; என்று புகையின்றி ஸ்டேஷனை விட்டுக் கிளம்பியது.</p>
<p>நமக்கும் யாரிடமும் பகையில்லை!</p>
<p>பின் குறிப்பு: இதைப் படித்துவிட்டு வட இந்திய மக்களே இப்படித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனெனில், பிரயாணங்களில் நாம் கண் கூடாகப் பார்க்கிறோம்&#8230; தென் இந்தியர்கள் கூட டிக்கட் வாங்கிவிட்டாலே ரயிலே அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல் நினைத்துச் செயல்படுவார்கள். மனிதாபிமானம் ஈவு இரக்கம் இல்லாமல் நடப்பதைப் பார்க்கும் போது சில சமயங்களில் வட இந்தியர்களே பரவாயில்லையோ என்று தோன்றும். பொதுவாக நாம் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf/">சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தது&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தெய்வமே தேரில் வீதி உலா வருகிறது!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Mon, 20 Oct 2014 20:01:44 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=411</guid>
		<description><![CDATA[<p>அது ஒரு சாதாரண குடும்பம். குடும்பத் தலைவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண். அவரது மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்து விட்டார். எல்லா ஆண்களைப் போலவே பிள்ளைகளை வளர்க்க என்று சொல்லி அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5/">தெய்வமே தேரில் வீதி உலா வருகிறது!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<div style="width: 932px" class="wp-caption alignnone"><img class=" " title="Hells Angels and Hinduism by austinevan" alt="indian chariot photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/10/3937147984_e4c89b3073_b_indian-chariot.jpg" width="922" height="722" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/19762676@N00/3937147984" target="_blank">austinevan</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>அது ஒரு சாதாரண குடும்பம். குடும்பத் தலைவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண்.</p>
<p>அவரது மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்து விட்டார்.</p>
<p>எல்லா ஆண்களைப் போலவே பிள்ளைகளை வளர்க்க என்று சொல்லி அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அதற்குப் பிறகு இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது மனைவி கிராமத்திலிருந்து வந்தப் பெண் என்றாலும் கோயம்புத்தூருக்கு அருகில் வசித்ததால் கொஞ்சம் சாமர்த்தியமாகத்தான் இருந்தாள்.</p>
<p>அரை டவுசர் போட்டிருந்த மூத்தாளின் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெண்ணையும் அருமையாக ஆக்கிப் போட்டு அண்ணாந்து பார்க்கின்ற அளவுக்கு வளர்த்தாள். அவளது குழந்தைகளும் வளர்ந்தன. முதல் தாரத்துப் பிள்ளைகள் மூன்றும் சித்தி சித்தி என்று அன்பாகத் தான் இருந்தார்கள். ஆண் பிள்ளைகள் அனைவரும் சொந்த சகோதரர்கள் போல் தான் வளர்க்கப்பட்டனர்.</p>
<p>மூத்தாளின் பெரிய பையன் என்ஜினீயருக்குப் படித்தான். இரண்டாவது பையன் படித்துவிட்டு மத்திய அரசில் வேலைக்குச் சேர்ந்தான்.</p>
<p>இடையில் தந்தை இறந்து போனார்.</p>
<p>தங்கைக்குக் கல்யாணம் முடித்தனர். சித்திக்குப் பிறந்த பிள்ளைகள் இரண்டும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.</p>
<p>இதற்கிடையில் என்ஜினீயருக்குப் படித்த பையன் அரசாங்க வேலையில் இருந்ததால் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனான். மாற்றலாகிப் போனாலும் இரண்டாவது பையனின் சம்பளம் குறைவு என்பதால் ஈடு கட்ட முடியாது என்று ஊரில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வெளியூரிலேயே தங்கிவிட்டான்.</p>
<p>பணம் அனுப்புவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.</p>
<p>இரண்டாவது பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது.</p>
<p>சித்தியின் பிள்ளைகள் இரண்டு பேருக்குமே படிப்பு ஏறவில்லை. அவர்களும் ஆளுக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டார்கள். பிறகு திருமணமும் நடந்தேறியது. இதற்கிடையில் சித்திக்குப் புற்று  நோய் காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியதாயிற்று.</p>
<p>வயிற்றில் பெரிய கட்டி! அறுவை சிகிச்சை நடந்தது. மூத்தாளின் என்ஜினீயர் பிள்ளை பார்க்க வரவில்லை.</p>
<p>மரணப் படுக்கையில் இருந்த சித்தியோ &#8220;என் மூத்த மகன் என்ஜினீயர் புள்ள வரவே இல்லையே&#8221; என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.</p>
<p>சித்தியின் நிலைமை தெரிந்தும் கூட என்ஜினீயர் பிள்ளை கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வர முடியாததற்கு பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வருகின்ற சுவடே தெரியவில்லை.</p>
<p>மருமகளில் ஒருத்தி, &#8220;டவுசர் போட்டிருந்த பசங்க &#8216;பேண்ட்&#8217; போடறவரை வளர்த்தாளே&#8230; சித்தியைப் பார்க்க எப்படி ஒங்க அண்ணா வராம இருக்கார்? ஒங்களை எல்லாம் சொந்தப் பிள்ளைகளாகத் தானே அந்த அம்மா நெனைச்சா&#8230; மூத்தாளோடப் பிள்ளைகள்னும் தன்னோடப் பிள்ளைகள்னும் தனியாவா பார்த்து வளர்த்தாள்? இல்லையே! சித்தி மேல என்னதான் தப்பிருந்தாலும் வளர்த்தத நெனச்சி&#8230; நன்றிக் கடனைத் தீர்க்கறதுக்காகவாவது வரணும்னு தோனலையே&#8230; ஏன் தம்பிகள் நீங்கள்ளாம் என்ன செய்றீங்க&#8230; அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா? இன்னைக்கோ நாளைக்கோன்னு உயிர்ப் போற நெலையில இருக்கிறவங்களை பார்க்காம இருக்க எப்படித் தான் மனசு வருதோ? மூலஸ்தானத்துல இருக்கிற அந்தச் சாமியே கூட கோயிலுக்கு வந்து பார்க்க முடியாதவங்களுக்காக தெருவுல உலா வர்றார். உம். இவங்கள்லாம் சாமிக்கும் மேலயா?&#8221; என்று புலம்பினாள்.</p>
<p>அதைக் கேட்ட இரண்டாவது தம்பி ஊரிலுள்ள அண்ணனைப் பார்த்து சித்தியைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்ன பிறகு ஏதோ போனால் போகிறது என்பது போல் வந்து பார்த்தான்!</p>
<p>அதன் பிறகு ஆஸ்பத்திரியில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடமெல்லாம் &#8220;என்ஜினீயர் புள்ள என்ன வந்துப் பார்த்துட்டாரு&#8230; பார்த்துட்டாருன்னு&#8230;&#8221; பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்த அந்த சித்தியின் ஆன்மா சில நாட்களில் பிரிந்தது!</p>
<p>உலகம் பலவிதம்&#8230; அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்!</p>
<p>செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவே கர்ணன் நியாயமற்ற கௌரவர்களின் பாவத்தில் பங்கேற்க நேர்ந்தது. சோற்றுக் கடனைத் தீர்க்காமல் கடனாளியாக உயிர் விட்டால் அந்த உயிர் எங்கே போகும்?</p>
<p>எப்படி அமைதியைப் பெறும்?</p>
<p>அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!</p>
<p>&nbsp;</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5/">தெய்வமே தேரில் வீதி உலா வருகிறது!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பச்சைத் துரோகங்கள்</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 12 Oct 2014 12:03:10 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=384</guid>
		<description><![CDATA[<p>அவள் நல்ல நிறம். உயரம். மிகவும் அழகானவள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் உள்ளே கண்கள் ஒளி மின்னலென பளிச்செனத் தெரியும். மெல்லிய உதடுகளில் எப்போதும் புன்னகை ஓடிக்கொண்டிருக்கும். நளினமானவள்! பிரபலமான கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவளது பெயரை சுந்தரி என்று வைத்துக்கொள்வோமே. அழகுக்கு ஏற்றாற்போன்று வகைவகையான புடவைகள். அதற்கேற்ற வண்ணத்தில் கைவளை மற்றும்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">பச்சைத் துரோகங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<div style="width: 510px" class="wp-caption alignnone"><img title="Couple of Couples by VinothChandar" alt="couple india photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/10/8035802006_fffa0ebc39_couple-india.jpg" width="500" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/44345361@N06/8035802006" target="_blank">VinothChandar</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p>அவள் நல்ல நிறம். உயரம். மிகவும் அழகானவள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் உள்ளே கண்கள் ஒளி மின்னலென பளிச்செனத் தெரியும். மெல்லிய உதடுகளில் எப்போதும் புன்னகை ஓடிக்கொண்டிருக்கும். நளினமானவள்! பிரபலமான கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>அவளது பெயரை சுந்தரி என்று வைத்துக்கொள்வோமே.</p>
<p>அழகுக்கு ஏற்றாற்போன்று வகைவகையான புடவைகள். அதற்கேற்ற வண்ணத்தில் கைவளை மற்றும் பொட்டு&#8230; இத்யாதி&#8230; இத்யாதி.</p>
<p>வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தப் பெரிய நகரத்தில் அழகானதொரு பங்களா. அதைச் சுற்றிலும் தோட்டம், மரம், செடி, பூ என்று எல்லாமே அழகு.</p>
<p>கணவர் டாக்டர். வீட்டு வேலைகளைச் செய்ய உதவிக்கு ஒரு பெண்மணி. சுந்தரி இருக்கும் போதே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்தப் பெண்மணி அவளது வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அவுட்ஹவுசில் ஒரு குடித்தனம் வாடகைக்கு வைக்கப்பட்டிருந்தது.</p>
<p>கணவர் தினமும் காரில் சுந்தரியை கல்லூரியில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிடுவார். திரும்பவும் சாயங்காலம் வந்து அவளை அழைத்துச் செல்வார். சுந்தரிக்குத் திருமணம் நடந்ததும் குழந்தை உண்டானது. உடனேயே எதற்குக் குழந்தை என்று கணவனும் மனைவியும் கலந்துப் பேசி கருக்கலைப்புச் செய்தனர்.</p>
<p>அதன் பின்னால் சில வருடங்களுக்குப் பிறகு என்ன முயற்சி செய்தும் குழந்தை பிறக்கவில்லை.</p>
<p>நான் பழகிய தோழிகளில் சுந்தரியும் முக்கியமானவள். எல்லோருக்குமே அவளைப் பிடிக்கும். கல்லூரி கேம்பஸ்ஸில் எங்கே என்னைப் பார்த்தாலும் நின்றுப் பேசிவிட்டுத் தான் செல்வாள். வீட்டுக்குச் சாப்பிடவா என்று சதா சொல்லிக்கொண்டிருந்தாள் என்று ஒருமுறை சென்றேன். விதவிதமானப் பலகாரங்களை உதவி செய்யும் பெண்மணியிடம் செய்யச் சொல்லி என்னை அசத்திவிட்டாள்!</p>
<p>இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது நிறைய சமயங்களில் உண்மையாகிப் போகின்றது. அவளைப் பார்க்கின்ற யாரும் அவளுக்கு என்ன குறை&#8230; குழந்தை இல்லை என்பதைத் தவிர என்று தான் யோசிப்பார்கள்.</p>
<p>எல்லோரையும் கேட்டுப் பாருங்கள்&#8230; ஏதாவது குறையைச் சொல்லி அழுவார்கள். வீட்டுக்கு வெளியே நின்று பார்த்தால் ஒன்றும் புரியாது. உள்ளே போய்ப் பார்த்தால் தான் எங்கே ஒழுகுகிறது, எங்கே அழுக்கு என்றெல்லாம் புரியும்.</p>
<p>வேலை நிமித்தமாக நான் திரும்பவும் அந்த ஊருக்குச் சென்றபோது என் பழைய தோழிகள் சுந்தரியைப் பற்றிச் சொன்னபோது பதைபதைத்துப் போனேன். துடிதுடித்துப் போனேன். நான் வெளிப்படையாக அழவில்லையே தவிர என் இதயத்தில் ரத்தம் கசிந்தது.</p>
<p>மூச்சு முட்டும்படி நிறைய வேலைகள் எனக்கு இருந்ததாலும், குழந்தைகளைத் தனியாக என் சின்ன அண்ணன்  விஜி பொறுப்பில் விட்டிருந்ததாலும் (பாவம் என் விஜி அண்ணா எனக்காக அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வந்திருந்தார்), உடனே நான் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் சுந்தரியை எப்படியும் சந்தித்துப் பேசவேண்டும், அதற்காகவே திரும்பவும் அந்த நகரத்திற்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.</p>
<p>இதோ&#8230; இதுவரை என்னால் செல்ல முடியவில்லை&#8230; இன்றைக்கு வரை நான் அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்&#8230; முடியுமா தெரியவில்லை.</p>
<p>சரி. இடையில் சுந்தரிக்கு என்ன நேர்ந்தது?</p>
<p>அவள் தினமும் கல்லூரிக்குச் சென்றால் திரும்பவும் மாலை தானே வீட்டுக்குச் செல்ல முடிகிறது. அதுவும் மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது கல்லூரிக்கூட்டங்கள், அந்தந்தத் துறைக் கூட்டங்கள், விழாக்கள்&#8230; அது இதென்று இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கூட வீட்டுக்குச் செல்கின்றமாதிரி இருக்கும்.</p>
<p>இந்த இடைவெளி அவளது டாக்டர் கணவனுக்கு வசதியாகப் போனது.</p>
<p>எப்படி?</p>
<p>ஆமாம்&#8230; அவளது கணவருக்கும் வீட்டில் வேலைக்கு உதவி செய்வதற்கு வந்தப் பெண்மணிக்கும் உறவு ஏற்பட்டு விட்டது!</p>
<p>வாய்க்குவாய் கணவரைப் பற்றிப் பேசியவள். மொத்த அன்பையும் மொத்தமாக அவருக்கே அளித்தவள். உலகமே அவர்தான் என்று உள்ளம் பூரித்தவள். நம்பிக்கையின் நாயகன் என்று நம்பிக்கொண்டிருந்தவள். தன்னை விட்டு இன்னொரு பெண்ணிடம் கணவன் எப்படிப் போக முடியும் என்பதை நம்ப முடியாதவள். அதிர்ச்சிக்குள்ளானாள்&#8230; அவதிப்பட்டாள்&#8230; ஆழ் கடலுக்குள் அழுத்தப்பட்டதுபோல ஆடிப்போனாள்.</p>
<p>சரி. என்னதான் செய்தாள்?</p>
<p>அவளுக்கு என்ன தோன்றியதோ&#8230; உலகமே தன் கையை விட்டுப் போனதாகக் கருதியவள் மிகவும் மனம் சஞ்சலப்பட்டு வேறு மதத்திற்கு மாறிவிட்டாள்!</p>
<p>இப்படி என் தோழிகள் சொன்னபோது என்ன நினைத்து இப்படிச் செய்திருப்பாள் என்று எனக்குப் புரியவில்லை.</p>
<p>கணவர் செய்த தவறுக்கு இவள் ஏன் மதம் மாறவேண்டும்? மதம் மாறுவதால் திருந்திவிடப் போகிறாரா? அல்லது அவருக்கு அவருடைய மதம் மிக முக்கியமானது என்று தெரிந்து அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டுமென்று மதம் மாறிவிட்டாளா?</p>
<p><span style="line-height: 1.5em;">அடி தோழி&#8230;! இதை நீ படிக்க நேர்ந்தால் என்னைத் தொடர்பு கொள். உன்னுடைய இருப்பு எங்கே என்று தெரியாமல் நமது தோழிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்&#8230; தேடிக்கொண்டிருக்கிறேன்&#8230; நிச்சயம் ஒரு நாள் நான் உன்னைக் கண்டிப்பாகப் பார்ப்பேன் என்று மிக நம்பிக்கையுடன் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.</span></p>
<p>சில ஆண்கள் ஏன் இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கிறார்கள்?</p>
<p>வெளிநாடுகளில் இம்மாதிரியான நிலைகளில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் கலந்துப் பேசி விட்டுக்கொடுத்து அல்லது மீண்டெடுத்து வாழ்வதைப் பார்க்கிறேன். ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் எந்த நிலையிலும் பெண்கள் அதிகம்பேர் கணவரை விட்டுப் பிரியாமலிருக்கத்தானே விரும்புகிறார்கள்!</p>
<p>இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கின்ற ஆண்கள் அவர்களது சகோதரிகளுக்கு இந்த நிலை வரும்போது சும்மா இருப்பார்களா? எப்படித் துடித்துப் போவார்கள்&#8230; நினைத்துப் பார்க்க மாட்டார்களா?</p>
<p>அவரது மனைவி அப்படிச் செய்திருந்தால், எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்? அவமானம் அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா, அண்ணன், தங்கைகளுக்கும் என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்!</p>
<p>ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டமா? ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டங்களை எதெதில் வைக்க வேண்டுமோ அததில் பொதுவில் வைப்போம்!</p>
<p>திருமணம் செய்யும் போது ஏழு சப்த அடிகளில் ஒன்றான &#8216;கஷ்ட நஷ்டத்திலும் உன்னைக் கைவிடமாட்டேன்&#8217; என்று பொருள்பட ஓர் ஆண் திருமணம் செய்கிறான் என்பதை அவனது தாய் மொழியில் சொன்னால் தான் புரியும் போல் தெரிகிறது!</p>
<p>என் தோழி சுந்தரியின் டாக்டர் கணவருக்கு ஒரு கேள்வி. உள்ள உணர்ச்சியை விட உடல் உணர்ச்சிக்கு இடம் கொடுத்த சகோதரரே&#8230; வைத்தியரான உங்களுக்குத் தற்காலிக அந்த உணர்ச்சிக்குத் தடை போடத் தெரியவில்லையா?</p>
<p>நீங்களே இப்படிச் செய்தால்?</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">பச்சைத் துரோகங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாங்கள் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள்!</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 12 Sep 2014 23:01:40 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=157</guid>
		<description><![CDATA[<p>1964-ம் வருடம். வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். மொத்தமே அந்த வகுப்பில் ஒன்பது பேர் தான்! அவ்வகுப்பில் என்னுடன் படித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கனகமணியை ரயிலில் ஏற்றுவதற்காக நானும் எனது மற்றொரு தோழி உமாவும் சேர்ந்து காட்பாடி ஜங்ஷனுக்குச் சென்றோம். அந்தக் காலத்தில் பட்ட வகுப்பில் முதலாண்டு படிப்பவர்களுக்கு&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/">நாங்கள் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a title="நாங்கள் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள்!" href="http://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/"><img class="size-full wp-image-186" alt="Platform" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/07/Platform.jpg" width="580" height="384" data-id="186" /></a></p>
<p style="text-align: justify;">1964-ம் வருடம். வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். மொத்தமே அந்த வகுப்பில் ஒன்பது பேர் தான்! அவ்வகுப்பில் என்னுடன் படித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கனகமணியை ரயிலில் ஏற்றுவதற்காக நானும் எனது மற்றொரு தோழி உமாவும் சேர்ந்து காட்பாடி ஜங்ஷனுக்குச் சென்றோம்.</p>
<p>அந்தக் காலத்தில் பட்ட வகுப்பில் முதலாண்டு படிப்பவர்களுக்கு பல்கலைக்கழகத் தேர்வு கிடையாது. எல்லோருக்கும் ‘பாஸ்’ போட்டு விடுவார்கள். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு தான் தேர்வு உண்டு.</p>
<p>அதனால் முதலாம் ஆண்டு முழுவதும் ஆட்டம் பாட்டம் தான்.</p>
<p>பட்ட வகுப்பு என்பதால் வானத்தில் ‘பட்டம்’ பறப்பது போல் பறந்துக் கொண்டிருப்போம்.</p>
<p>அந்தக் காலத்து திரைப் படங்களில் வருவது போல் குதிரை வால் கொண்டை, கூலிங் கிளாஸ், இரண்டு அங்குல உயரமுள்ள குதிகால் உயர்ந்த ‘பாட்டா’ செருப்புடன் (மேலே வெள்ளையாக இரண்டு பட்டைகளுடன் இருக்கும், மாடு போல் உழைக்கும்) அலைந்துக் கொண்டிருப்போம்.</p>
<p>ஏன்?</p>
<p>ஏனென்றால் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தையே முழு நேர படிப்பாக எடுத்துப் படிக்கிறோம் இல்லையா&#8230; அதனால்தான்!</p>
<p>தலையில் கொம்பு முளைக்காத குறைதான்!</p>
<p>சரி. விஷயத்திற்கு வருகிறேனே.</p>
<p>மேற்சொன்ன அலங்காரங்களுடன் ஆளுக்கொரு ஹாண்ட்பேக்கை கையில் எடுத்துக்கொண்டு காட்பாடி ஸ்டேஷனில் சென்னையை நோக்கிச் செல்லும் ரயில் வருகின்றவரை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே இங்கே என்று ஸ்டேஷனில் அலைந்துக்கொண்டிருந்தோம்.</p>
<p>கொஞ்ச நேரம் அரட்டை அடித்தோம். பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடித்தோம். காத்துக் கொண்டிருந்த பயணிகள் எங்களைப் பார்ப்பதைப் பார்த்து பெருமை பிடிபடவில்லை&#8230; அவர்களை நோக்கி அனாவசியப் பார்வை வீசினோம்.</p>
<p>பாமர மக்கள் முன்னால் நாங்கள் தான் அறிவுக் களஞ்சியங்கள் என்று நின்றோம்.</p>
<p>அப்பாடா&#8230; எப்படியோ பிளாட்ஃபாரம் அதிர அதிர ரயில் வந்து நின்றது!</p>
<p>கனகமணி ரயிலில் ஏறி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து விட்டாள். ஒரு பத்து நிமிடம் அவளிடம் பேசிக்கொண்டிருந்திருப்போம்.</p>
<p>ரயில் புறப்படத் துவங்கியதும் கனகமணியிடம், “பத்திரமாகப் போய்ச் சேர்” என்றவர்கள் கடைசியாக “ஹாவ் எ நைஸ் ஜர்னி” (Have a nice journey) என்று கையசைத்தவாறு நின்றோம். எதுவரை? ரயிலின் வால் தெரிகிறவரை!</p>
<p>அவளுக்கு ‘நைஸ் ஜர்னி’ சொன்ன எங்களுக்குத் தெரியாது நாங்கள் ‘பேட் ஜர்னியை’ (bad journey) நோக்கிச் செல்கிறோம் என்று.</p>
<p>பிளாட்ஃபார முடிவில் இருக்கிற படிகளை நோக்கி ஏறும் போது பாதி வழியில் தான் கவனித்தோம்&#8230; படி முடிகின்ற இடத்தில் டிக்கட் பரிசோதகர் நின்று கொண்டு டிக்கெட் கலெக்ட் செய்து கொண்டிருந்தார்!</p>
<p>அறிவுக் களஞ்சியமான(?) நாங்கள் பிளாட்ஃபார டிக்கட் வாங்க மறந்துவிட்டோம் என்பதும் எங்களுக்கு முன்னால் போன பெரும்பான்மையான பாமரர்கள்(!) எல்லோரும் டிக்கட் வாங்கியிருக்கிறார்கள் என்பதும் அப்போது தான் புரிந்தது!</p>
<p>இரண்டு பேருக்குமே நெஞ்சு ‘படபட’வென்று அடித்துக்கொண்டது.</p>
<p>ஆட்டம் பாட்டம் அடங்கிப் போனது.</p>
<p>துச்சமாகப் பார்த்தது துயரமாகிப் போனது. மிச்சம் என்ன இருக்கப் போகிறது? எங்கள் மானம் கப்பல் ஏறப் போகிறது ரயில் வழியாக என்பது திண்ணமாக, திண்டாடித்தான் போனோம்!</p>
<p>ஊரில் பிரபலாமாக உள்ள என் தந்தையை நினைத்ததும் வேர்த்துக் கொட்டியது.</p>
<p>வடஆர்க்காடு மாவட்டத்தின் தலைமை ஊர் வேலூர் என்பதால் எங்களது ஊரான திருப்பத்தூரிலிருந்து நிறைய பேர் பல வேலைகளை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து வழியாக வேலூர் வருவதுண்டு. அவர்களில் யாராவது ஒருவர் பார்த்தால் கூட போதும். என் தந்தையிடம் சொல்லி விட்டால், ‘என் பெண் டிக்கட் வாங்காமல் பரிசோதகரிடம் தலை குனிந்து நின்றாள்’ என்று தந்தை வருத்தப்படுவதுடன், தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டோமே என்ற எண்ண அலைகள் ஏழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அவசர அவசரமாக போட்டிருந்த கூலிங் கிளாஸ்களைக் கழட்டி கைகளில் வைத்தவாறு&#8230; தயங்கிய வாறு&#8230; இரண்டு பேரும் முழி முழி என்று முழித்தவாறு பரிசோதகரை நோக்கி நடந்தோம்.</p>
<p>ஏற்கனவே எனக்கு முட்டைக் கண்ணி என்று பெயர்&#8230; எப்படி முழித்திருப்பேன் என்று பாருங்கள்! ஒருவகையில் என் கண்களே பரவாயில்லை&#8230; முட்டைக் கண்ணி என்ற பெயரோடு போனது&#8230;</p>
<p>என் தோழி உமாவின் கண்களைப் பார்த்தீர்கள் என்றால் அவளது கண்களுக்கு முன்னால் என் கண்கள் சிறியது தான் என்று ஒத்துக் கொள்வீர்கள். ஆமாம்&#8230; உண்மையத்தான் சொல்கிறேன்&#8230; இதோ&#8230; ‘இப்போதே நான் வெளியே வந்து விழுந்து விடப்போகிறேன்’ என்று சொல்லும் அளவிற்கு நம் பழைய காலத்து நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் கண்களைப் போன்று பெரிய்ய்ய்ய்ய்ய்ய சோடா கோலிக் குண்டுக் கண்கள் அவளுடையது!</p>
<p>பரிசோதகர் பார்த்துப் பயந்து போயிருப்பாரோ? உம்ஹூம். அது தான் இல்லை!</p>
<p>ஒரு சமயம் அப்படியே பின்வாங்கி ஓடிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது! ச்சீ&#8230; கேவலம் அது. வருவது வரட்டும் என்று மெல்ல பரிசோதகரிடம் போய் நின்றோம். “டிக்கட்” என்று அவர் கேட்டார். மென்று முழுங்கியவாறு “நாங்கள் வாங்கலை” என்றோம்.</p>
<p>“என்னது, வாங்கலையா?” என்னமோ நாங்கள் வெடிகுண்டு போட்டது போன்ற அதிர்ச்சியைக் குரலில் காட்டினார்!</p>
<p>நாங்கள் பதில் சொல்லவில்லை.</p>
<p>“எங்கிருந்து வர்றீங்க?” என்று திரும்பவும் கேட்டார்.</p>
<p>“ஃபிரண்ட ரயில் ஏத்த வந்தோம்”.</p>
<p>“டிக்கட் வாங்கலைனா எப்படி? எங்க&#8230; ஜோலார்பேட்டைலருந்து வர்றீங்களா? அங்கிருந்து காட்பாடிக்கு வர்றதுக்கு எவ்வளவு சார்ஜோ அதுதான் ஃபைன் தெரியுமா?” என்றவாறு எங்களை நக்கலாகப் பார்த்தார்.</p>
<p>பதறிய நான், “ஐயய்யோ ஜோலார்பேட்டையிலருந்து வரலை, நாங்க முன்ன சொன்ன மாதிரி சத்தியமா ஃபிரண்ட ரயில் ஏத்தத் தான் வந்தோம்”, என்றேன்.</p>
<p>முன்பே நாங்கள் பிளாட்ஃபாரத்தில் சுத்திக் கொண்டிருந்ததை அவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் தெரியாதது போல் பேசியதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இடையிடையே எங்கள் ஊர்க்காரர்கள் யாராவது தெரிகிறார்களா என்று என் கண்கள் அலை மோத, பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று, “சரி சார், நாங்க செஞ்சது தப்புதான். ரெண்டு பேரும் ஃபைனை கட்டிட்றோம். ஏய் உமா! பத்து ரூபா குடு டீ” என்றவள், என் ஹாண்ட்பேக்கில் இருந்து இன்னொரு பத்து ரூபாயையும் எடுத்து மொத்தமாக இருபது ரூபாயை அவரிடம் நீட்டினேன். அந்தக் காலத்தில் அந்தப் பணமே கொஞ்சம் அதிகம்தான்!</p>
<p>கொடுத்தப் பணத்தை வாங்காமல், “ரயில் ஏத்தத்தான் வந்தீங்க என்று எனக்கும் தெரியும்&#8230; காலேஜில படிச்சா மட்டும் போதாது&#8230; பிளாட்ஃபார டிக்கட் வாங்கவும் தெரியணும்&#8230; தெரியும்ல? சரி சரி&#8230; போங்க”, என்றாரே பார்க்கலாம்!</p>
<p>நாங்களும் ‘சரி சரி’ என்று ‘பூம் பூம்’ மாடு மாதிரி தலையாட்டிவிட்டுத் ‘தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’ என விட்டால் போதுமென்று தலைதெறிக்க ஓடினோம்!</p>
<p>கல்லூரி விடுதிக்கு வந்த பிறகு, எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்த கதை&#8230; அது பெரிய கதை.</p>
<p>பன்னிரண்டு வருடங்களுக்கு முன் (அப்போது குரோம்பேட்டை பெண்கள் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தாள் கனகமணி) கனகமணி என் வீட்டிற்கு வந்த போது என் பெண்களிடம் இதைப் பற்றிப் பேசிச் சிரித்தது நினைவுக்கு வருகிறது.</p>
<p>ஆனால் கடைசி வரை என் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசாத திருட்டுக் கழுதை தான் நான்! மேலே உள்ள என் தந்தை என்னை மன்னிப்பாராக!</p>
<p>இதனால் நாம் அறிவது யாதெனில் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள் அதாவது &#8216;பிளாட்ஃபார டிக்கட்&#8217; இல்லாதவர்கள், ஃபைன் கட்டவேண்டும்&#8230; சில சமயம் எந்த இடத்தில் இருந்து ரயில் புறப்பட்டு வருகிறதோ, அந்த இடத்தில் இருந்து நம்மைப் பிடித்த இடத்தின் ஸ்டேஷன் தூரம்வரைக் கூட கணக்கிடப்பட்டு ஃபைன் கட்ட வேண்டி இருக்கும்.</p>
<p>எங்களைப் போல் தப்பித்து விட முடியும் என்று நினைத்து விட வேண்டாம்.</p>
<p>இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஊருக்கு யார் புறப்பட்டாலும், அவர்களை வழியனுப்ப யார் போனாலும் சரி&#8230; ‘பிளாட்ஃபாரம் டிக்கட் வாங்க மறந்துடாதீங்க’ என்று எனது நினைவூட்டலை எல்லோருக்கும் இலவசமாக செய்து கொண்டிருக்கிருக்கிறேன்!</p>
<p>இந்தச் சேவைக்காக எனக்கு ரயில்வே நிர்வாகம் என்ன சம்பளமா தரப் போகிறது?</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/">நாங்கள் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள்!</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கஞ்சி கால்வயிறு&#8230;</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 25 Aug 2014 10:06:31 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=151</guid>
		<description><![CDATA[<p>இப்போது காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் எளிமையான வாழ்க்கையைத்தான் மக்கள் விரும்பினார்கள். ஆனால் இப்போது ஆடம்பரம் அதிகமாகிவிட்டது. ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. உண்மைதான். ஆனால் அதற்காக&#8230; தொலக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாகனம், எல்லாமே &#8216;பெரியதாக&#8217; அதிக விலை உயர்ந்ததாக வாங்கவேண்டும் என்று நினைக்கலாமா? தெரிந்தவர், உறவினர், தோழர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே போட்டிபோட்டுக்கொண்டு வாங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/">கஞ்சி கால்வயிறு&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<div style="width: 376px" class="wp-caption alignnone"><img title="Maison art déco de Kanadukathan (Inde) by dalbera" alt="tamil house photo" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/08/14102750944_8342030283_tamil-house.jpg" width="366" /><p class="wp-caption-text"><small><a style="text-decoration: none;" title="Image inserted by the ImageInject WordPress plugin" href="http://wpinject.com/" rel="nofollow">Photo</a> by <a href="http://www.flickr.com/photos/72746018@N00/14102750944" target="_blank">dalbera</a> <a title="Attribution License" href="http://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank" rel="nofollow"><img alt="" src="http://ranipshivan.com/wp-content/plugins/wp-inject/images/cc.png" /></a></small></p></div>
<p style="text-align: justify;">இப்போது காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் எளிமையான வாழ்க்கையைத்தான் மக்கள் விரும்பினார்கள்.</p>
<p>ஆனால் இப்போது ஆடம்பரம் அதிகமாகிவிட்டது.</p>
<p>ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. உண்மைதான். ஆனால் அதற்காக&#8230; தொலக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாகனம், எல்லாமே &#8216;பெரியதாக&#8217; அதிக விலை உயர்ந்ததாக வாங்கவேண்டும் என்று நினைக்கலாமா?</p>
<p>தெரிந்தவர், உறவினர், தோழர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே போட்டிபோட்டுக்கொண்டு வாங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.</p>
<p>செல்வேந்திரர்கள் வாங்கி விட்டார்கள் என்பதற்காக, கையேந்திரர்கள் வாங்க நினைப்பது தவறில்லையா?</p>
<p>கடனை வாங்கியாவது ஒரு பொருளை அடம் பிடித்து வாங்குவதன் விளைவு என்ன ஆகும்? ஒன்றுமில்லை&#8230; நீங்கள் கடனாளியாக இருப்பீர்கள்!</p>
<p>வரவுக்கேற்ற செலவு செய்யாமல் எல்லை மீறியதன் விளைவால் தெருவில் நின்றவர்கள் பல பேர்.</p>
<p>ஊர்ப் பெருமைக்காக ஊரையே திருமணத்திற்கு அழைத்து ‘தாம் தூம்’ என்று செலவு செய்துவிட்டுப் பிறகு செல்லாக்காசாகி, கடனாளியானவுடன் ஊர் முகத்தில் விழிக்க முடியாமல் முகத்துக்கு முக்காடு போட்டுக்கொண்டு போவதைப் பார்த்திருக்கின்றேன்&#8230;</p>
<p>கடன் வாங்கிக் கையில் காசிருக்கின்ற வரை வீடே கல்யாணக்களைதான்! கடன்காரன் வந்து காசு கேட்டு நெருக்கும்போது கவலை மனிதனை காவு கொள்கிறது.</p>
<p>கடன்காரனின் சுடு சொற்களால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் கதைகளைக் கேட்டதன் பின்பும் திருந்தாதவர்கள் திருந்தவேண்டும் என்பதற்காக திரும்பித் திரும்பிக் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்&#8230;</p>
<p>எந்தக் காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காதீர்கள்.</p>
<p>திருப்பிக் கொடுக்கின்ற சக்தி இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.</p>
<p>விரும்பி வாங்குகின்ற பணத்தைத் திருப்பி அளித்தால் தானே திரும்பி வராத உலகத்திற்கு போனாலும் நம் சந்ததிகள் நம்மை வாழ்த்தும்.</p>
<p>உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கடனைச் சேர்த்து அவர்களையும் கடனாளியாக்கிவிடாதீர்கள்.</p>
<p>1950-60களில் சென்னைக்குப் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைப்பது என்பது மிகப் பெருமையாகக் கருதப்பட்டக் காலம்!</p>
<p>என் மாமாக்களில் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகளில் இருவரை சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.</p>
<p>ஊரிலேயே பெரிய வீடாகக் கட்ட வேண்டுமென்று சக்திக்கு மீறி பெரிய பங்களா ஒன்றைக் கட்டினார். கடனை அடைக்க வேண்டிய நேரத்தில் காசு வரக்கூடிய வாசற்கதவு அழுத்தமாக சாத்திக்கொண்டது! இதற்கிடையில் இரண்டாவது பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. பங்களாவை விற்றார். பிள்ளைகள் ஆளுக்கொரு வேலையைத் தேடி சென்னைக்குச் சென்றார்கள். சிலருக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையைச் செய்தார்கள்.</p>
<p>மாமா சிங்கம் போல் வாழ்ந்தவர்&#8230; சிறுத்துப் போனார். ‘சீற’வேண்டிய சிங்கம் ‘வேற’மாதிரிப் போனது. பிள்ளைகள் இவரைச் சார்ந்து நின்றதுபோய், பிள்ளைகளைச் சார்ந்து இவர் நின்ற நிலையில் சுயம் இழந்து, வெந்து, நொந்து, நூலாகி இறந்து போனார்.</p>
<p>உறவினர்கள் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.</p>
<p>ஏன்?</p>
<p>தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கலாம். உறவினர்களை அவர் மதியாமல் இருந்திருக்கலாம்&#8230; சேர்க்காமல் இருந்திருக்கலாம்&#8230; எவ்வளவோ குறைகள் இருந்திருக்கலாம்&#8230; குறையில்லா மனிதர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.</p>
<p>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. உறவினர்களுடன் உறவு இல்லாத வாழ்க்கை வீண்.</p>
<p>எந்த அளவுக்கு இராவணன் வருத்தப்பட்டிருந்தால் ‘கடன் பட்டாற் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் எழுதியிருப்பார். அதே நிலையில் இருந்த என் மாமாவுக்கு உறவினர் செய்யத் தவறியது என்ன தெரியுமா? ஆளுக்குக் கொஞ்சம் முதல் போட்டு அவரது தொழிலுக்கு உதவி செய்திருந்தால் அந்தக் குடும்பமும் உருப்பட்டிருக்கும்&#8230; செய்த உறவினர்களுக்கும் புண்ணியம் சேர்ந்திருக்கும்&#8230;</p>
<p>அப்படியும் அவர் எக்கேடுகெட்டால் எங்களுக்கு என்ன, அவருக்கு ஏன் நாங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் இன்னொரு வழியில் உதவியிருக்கலாம்&#8230; திருமணத்திற்கு மொய் எழுதுவதுபோல் பணத்தை மொத்தமாக வட்டியில்லாமல் கொடுத்துவிட்டு, அவருக்கு எப்போது முடியுமோ அப்போது திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் அல்லது மாதம் இவ்வளவு பணம் என்று கொடுக்கும்படியும் கேட்டு வாங்கியிருக்கலாம். அப்படியும் அவர் திருப்பி அளிக்க மாட்டார் என்று தோன்றினால் ‘காந்தி’ கணக்கில் எழுதி விட்டிருக்கலாம்.</p>
<p>வசதியானவர்கள் தர்மம் செய்வது தவறா?</p>
<p>ஒருவரின் வயதான காலத்தில் ஒன்றுமே இல்லாமல் நிற்கும்போது முடிந்தவரை உதவவேண்டும். அவரது பழைய வாழ்க்கையைக் கிளறி குற்றங்களைக் கண்டுபிடிப்பதைவிட கை தூக்கி விட்டால் போகின்ற இடத்திற்குப் புண்ணியமாக போகமுடியும்.</p>
<p>எதுவாகினும் “கஞ்சி கால்வயிறு குடித்தாலும் பரவாயில்லை, கடனில்லாத வாழ்க்கை போதும்!” என்ற தெளிவும், மனவுறுதியும் இருந்தால் அதுவே நிம்மதி!</p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/">கஞ்சி கால்வயிறு&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்</title>
		<link>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/</link>
		<comments>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 26 Jul 2014 10:45:06 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[ராணி. ப.சிவன்]]></dc:creator>
				<category><![CDATA[பார்த்ததும் கேட்டதும்]]></category>

		<guid isPermaLink="false">http://ranipshivan.com/?p=99</guid>
		<description><![CDATA[<p>சரி, இனி நடப்பவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். நமது வீடுகளில் அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சிகள், தம்பிகள், அண்ணிகள், தாத்தா பாட்டிகள்&#8230; இவர்களைப் பற்றி அக்கறை நமக்கு உள்ளதா? காலங்காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு, காலன் (எமன்) வருகின்றவரை ‘ஓய்வு’ கொடுக்காமல் இருக்கின்றோம். இது நியாயமா? நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. உழைத்து, ஓடாகி,&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/">மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a title="மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்" href="http://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/"><img class="size-full wp-image-185" alt="Marangal" src="http://ranipshivan.com/wp-content/uploads/2014/07/Marangal.jpg" width="580" height="384" data-id="185" /></a></p>
<p style="text-align: justify;">சரி, இனி நடப்பவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். நமது வீடுகளில் அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சிகள், தம்பிகள், அண்ணிகள், தாத்தா பாட்டிகள்&#8230; இவர்களைப் பற்றி அக்கறை நமக்கு உள்ளதா? காலங்காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு, காலன் (எமன்) வருகின்றவரை ‘ஓய்வு’ கொடுக்காமல் இருக்கின்றோம். இது நியாயமா? நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.</p>
<p>உழைத்து, ஓடாகி, எலும்பு தேய்ந்து, நரம்புகள் புடைத்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓர் அறுபது எழுபது வயதுக்கு மேலேயும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்ற ஆண், பெண் இருபாலாரையும் பார்க்கும்போது மனது பதறுகிறதே&#8230; முதியவர்களின் முதுகு வளைந்த நிலையிலும், கண், காது சரியாக செயல்படாத நிலையிலும், கால்கள் தடுமாறும் நிலையிலும், அவர்கள் மீது வேலை திணிக்கப்படும்போது தட்டுத் தடுமாறுகிறார்களே&#8230; நமக்கு மனம் பதறவில்லையா? ஏன்&#8230; அந்த அளவுக்கு மனம் கல்லாகிப் போனதா?</p>
<p>இல்லை&#8230; நிச்சயமாக நாம் அவ்வளவு மோசமில்லை&#8230; என்று தான் நினைக்கிறேன். கொஞ்சம் பார்வைக் குறைபாடு நம்மிடம் உள்ளது. அதை நேராக்கிவிட்டால் முதியவர்களின் நிலையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.</p>
<p>சென்னை தி.நகரில் 22 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததைக் கூறுகிறேன். நான் வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு நல்ல வசதியான குடும்பம். கணவன், மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், இவர்களுடன் கணவனின் தந்தை. அவருக்கு ஏறக்குறைய 70 வயதுக்கு மேல் இருக்கும். வெட வெடத்த&#8230; ஒல்லியான தேகம்&#8230; பார்க்கவே பாவமாக இருக்கும். அவரது மகன் குழந்தைகளை தன் காரில் தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.</p>
<p>அவருக்கு முடியாத நேரங்களில் மருமகள் பெண் குழந்தைகள் இரண்டையும், ஒன்று 5 வயதிருக்கும் இன்னொன்று 6 வயதிருக்கும்&#8230; பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் இல்லையா? பள்ளிக்கும் வீட்டிற்கும்&#8230; ஓர் இரண்டு தெரு நீளம் தான் இருக்கும். ஆனால் அவர் அழைத்துச் செல்ல மாட்டார்.</p>
<p>அப்பெண்மணியின் மாமனார் தான் அழைத்துச் செல்வார்&#8230; எப்படி? தட்டுத் தடுமாறி அவர் நடப்பதைப் பார்த்தாலே நமக்கு மனம் தத்தளிக்கும். இரண்டு பேரக்குழந்தைகளின் கைகளையும் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு, அவர்களது புத்தக மூட்டை இரண்டையும் முதுகில் முடியாது என்பதால் தோளில் போட்டுக்கொண்டு&#8230; மெதுவாக&#8230; மிக மெதுவாக&#8230; நடப்பார்.</p>
<p>அது சரி&#8230; அவருக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில்&#8230; பாதுகாப்பற்ற நிலையில் நடக்கக் கூடிய அவரை நம்பி, சின்னஞ்சிறு குழந்தைகளை ஒரு தாய் எப்படி அனுப்பினார் என்பது இப்போது நினைத்தாலும் எனக்கு செரிக்கவில்லை&#8230;</p>
<p>உங்களுக்கு எப்படி&#8230;?</p>
<p>அப்பெண்மணியின் தந்தையாக இருந்தாலும் அவர் அப்படித்தான் நடத்துவாரா?</p>
<p>நான் ஊருக்குச் சென்ற போது இதே போன்று&#8230; என் உறவுப் பெண் ஒருவர் ‘இப்போவெல்லாம் என்னால வேலை செய்ய முடியலைங்க’ என்று சொன்னதும் என் மனதில் சொல்லமுடியாத வருத்தம்.. என் பங்குக்கு நான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தாலும்&#8230; முழுவதும் அவர்கள் வேலையிலிருந்து விடுதலை பெற சிந்திக்க வேண்டியவர்கள் அவரது மகள்கள், மகன்கள், மற்றும் அவரது கணவர் தான் யோசிக்க வேண்டும்.</p>
<p><strong>சில மரங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும், காற்று விடுவதில்லை!</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/">மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்</a> appeared first on <a rel="nofollow" href="https://ranipshivan.com">Rani. P. Shivan</a>.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>https://ranipshivan.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
